எதிர்ப்பு எதிரொலி.. சென்னைக்கு பதில் புனே நகருக்கு இடம் பெயருகிறதா சிஎஸ்கே 'ஹோம் கிரவுண்ட்'?
Recommended Video

சென்னை: ஐபிஎல் போட்டிக்கு எதிராக அண்ணா சாலையில் பெரும் போராட்டம் இன்று வெடித்த நிலையில், அடுத்த போட்டி சென்னையில் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் நடத்துவோருக்கு இரு வகைகளில் வருமானம் கிடைக்கிறது. விளம்பரதாரர் வருவாய் மற்றும், டிக்கெட் விற்பனை வருவாய் மூலம் பணம் கிடைக்கிறது.
காவிரி விவகாரத்தால், சேப்பாக்கம் மைதானத்தில் இன்று, ஐபிஎல் நடத்த கூடாது என போராட்டக்காரர்கல் போராட்டங்கள் நடத்தியதால் அண்ணா சாலை போர்க்களமானது.

இருக்கைகள் காலி
இதனால் 40,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 3000 பேர் மட்டுமே ரசிகர்கள் இருந்தனர். இதனால் மைதானத்தின் பெரும் பகுதி காலியாக இருந்தது. சாலைகளை வழி மறித்து மஞ்சள் ஜெர்சி அணிந்து வந்த, ரசிகர்களை சிலர் தாக்கி அவர்கள் ஆடைகளை களைந்தனர்.

பெரும் கலாட்டா
இதேபோல மைதானத்தின் அருகேயும் ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியை சிலர் கழற்றி விரட்டியடித்தனர். உருட்டுக் கட்டைகளாலும் தாக்குதல் நடைபெற்றது. பல ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்ட நேரத்திலும் இதுபோன்ற தாக்குதல் நடந்துள்ள்ளது. எனவே, அடுத்த போட்டியின்போது சேப்பாக்கத்திற்கு ரசிகர்கள் வருவார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

வருவாய் பாதிக்கும்
ரசிகர்கள் வராவிட்டால் இங்கே கிரிக்கெட் போட்டி நடத்தி பலன் இல்லை. கிடைக்கும் வருவாயில் கணிசமான அளவுக்கு குறையும். மே 3ம் தேதிதான் மத்திய அரசு காவிரி தொடர்பாக வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளது. எனவே அதுவரை நடைபெறும் போட்டிகளுக்கு எதிர்ப்பு கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டோணி அணி
சென்னையில் இவ்வளவு சிரமங்களுக்கு நடுவே போட்டியை நடத்துவதற்கு பதில், சென்னை அணி ஆடும் போட்டிகளை புனே நகருக்கு மாற்ற வாய்ப்பு அதிகம் உள்ளது. புனே அணி கடந்த இரு வருடங்களாக ஆடியது. அந்த அணி கலைக்கப்பட்டுள்ளது. புனே கேப்டனாக டோணி செயல்பட்டார். எனவே புனே நகர மக்களும் சென்னையை போல, டோணியை மண்ணின் மகனாகவே பார்க்கிறார்கள். எனவே புனே மைதானத்திற்கு போட்டியை மாற்றி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்புள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications