பெரும்பான்மையை இழந்த அதிமுக அரசு பதவி விலக வேண்டும்.. திமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம்!
பெரும்பான்மையை இழந்துவிட்ட அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என திமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: பெரும்பான்மையை இழந்துவிட்ட அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என திமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்து படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இதுகுறித்து விவாதிக்க அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெகிறது.
இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

காற்றில் கரைந்த கற்பனை
அதன்படி 2ஜி மூலம் பல லட்சம் கோடி இழப்பு தொடரப்பட்ட வழக்கு பொய்யானது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2ஜி மாயவி காற்றில் கரைந்த கற்பனை கணக்கு என்றும் திமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பணத்தின் மூலம் வெற்றி
மேலும் ஆர்கே நகரில் தேர்தலில் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தின் மூலம் வெற்றி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக அரசு பதவி விலகவேண்டும்
மேலும் பெரும்பான்மையை இழந்துவிட்ட அதிமுக அரசு பதவி விலக வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனியும் அதிமுக அரசு தொடருவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றும் திமுக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.13,520 கோடி நிதி
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழக அரசுக்கு புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு 13,520 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பணியாற்ற தவறி நிர்வாகிகள்
மேலும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணியாற்ற தவறிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் திமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications