ஜெ. மரணம்.. ஒரு மாத தாமதத்திற்குப் பின்.. போயஸ் கார்டனிலிருந்து திங்கள் கிழமை விசாரணை தொடக்கம்!
ஜெயலலிதா மரணம் குறித்து வரும் திங்கள் கிழமை முதல் போயஸ் கார்டனில் இருந்து விசாரணை தொடங்கும் என நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து வரும் திங்கள் கிழமை முதல் போயஸ் கார்டனில் இருந்து விசாரணை தொடங்கும் என நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டர் மாதம் 22ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

விசாரணை ஆணைய தலைவர்
மூன்று மாதத்தில் விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அண்மையில் பொறுப்பேற்றார்.

போயஸ்கார்டனில் இருந்து விசாரணை
விசாரணை நடைபெறும் அலுவலகம் சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணை நடைபெறும் அலுவலகத்திற்கு இன்று வந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி, வரும் திங்கள் கிழமை முதல் போயஸ் கார்டனில் இருந்து விசாரணை தொடங்கும் என தெரிவித்தார்.

உறுதிமொழிப் பத்திரம் வடிவில்
ஜெயலலிதா மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஜெ. மரணம் குறித்து நேரடியாக தகவல் தெரிந்தவர்களும் நேரடி தொடர்பு உடையவர்களும் நவம்பர் 22ஆம் தேதிக்குள் தனது அலுவலகத்தில் உறுதிமொழிப் பத்திரம் வடிவில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த நேரத்தில் விசாரணை
தகவல்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என்றும் அவர் கூறினார். குறித்த காலத்திற்குள் விசாரணை செய்து தமிழக அரசிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications