விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது... மத்திய அமைச்சர் திட்டவட்டம்!
விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி: விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார். கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்றும் அவர் கூறினார்.
தமிழக விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.

அவர்களை சந்தித்த மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது நாட்டில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதுமில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் பிரச்சனைக்கு நீண்டகால தீர்வாக அமையாது என்றும் அவர் கூறினார்.
விவசாயிகளுக்கான இடுபொருட்களின் விலையை குறைப்பது மற்றும் விலை பொருட்களுக்கான சந்தையை உருவாக்குவதும் தான் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்று ராதாமோகன் சிங் தெரிவித்தார். மத்திய வேளாண் அமைச்சரின் இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications