அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் கோரிக்கை என்ன?, அரசு தர சம்மதிப்பது என்ன?
சென்னை: 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஊழியர்கள் சார்பில் 46 போக்குவரத்து தொழிற்சங்ககங்களை சேர்ந்த பிரதிநிகள், 8 போக்குவரத்து துறை இயக்குநர்கள், செயலர்கள் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கடந்த 27ம் தேதியும் மிகப்பெரிய அளவில் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழகம் முழுக்க 40,000 மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். 3 வருடங்களுக்கு ஒருமுறை 2.57 சதவீத ஊதிய உயர்வை அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், அரசோ, 4 வருடங்களுக்கு ஒருமுறை 2.44 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.
இதையடுத்துதான், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது 12வது கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையாகும்.
பேச்சுவார்த்தையின் இறுதியில், 2.44 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் 4வருடங்களுக்கு பதிலாக 3 வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதை ஊழியர் சங்கங்கள் ஏற்கவில்லை.
தொழிலாளர்கள் கேட்கும் சதவீதம் மற்றும் அரசு கொடுக்க சம்மதிக்கும் சதவீதம் நடுவேயுள்ள இடைவெளிதான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்.












Click it and Unblock the Notifications