அடேங்கப்பா... தமிழகம் முழுவதும் பாஜக 1,000 பிரசார பொதுக் கூட்டங்கள்... திருச்சி மாதிரியா?
தமிழகம் முழுவதும் 1,000 பொதுக் கூட்டங்களை பாஜக நடத்தும் என அறிவித்து திகைக்க வைத்துள்ளார் தமிழிசை.
சென்னை: தமிழகம் முழுவதும் மத்திய பட்ஜெட்டை விளக்க 1,000 பிரசார பொதுக் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்து மிரட்டல் விடுத்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
தமிழர் விரோத போக்குகளால் மத்தியில் ஆளும் பாஜக மீது தமிழகம் கடும் கொந்தளிப்பில் இருந்து வருகிறது. இதனால்தான் ஆர்.கே.நகரில் நோட்டாவைவிட மிக குறைவான வாக்குகளை பாஜக பெற நேரிட்டது.
இந்தியாவில் பெரும்பான்மை மாநிலங்களில் ஆளுகிறோம் என மார்தட்டுகிறது பாஜக. ஆனால் தமிழகத்தில் பாஜக கொடி எட்டிப்பார்க்காத கிராமங்கள் ஏராளம். நகரங்களில் கூட விரல் விட்டு எண்ணும் வகையில்தான் பாஜக இருக்கிறது..

போட்டி கூட்டம்
அண்மையில் திருச்சியில் திமுக நீட்டுக்கு எதிராக பிரமாண்ட கூட்டத்தை கூட்டியது. இதற்கு போட்டியாக நாங்களும் கூட்டத்தை கூட்டுகிறோம் என பாஜக களத்துக்கு இறங்கியது. கூட்டத்துக்கு வந்தவர்கள் எண்ணிக்கையைவிட காலியாக இருந்த நாற்காலிகள் எண்ணிக்கைதான் மிக அதிகமாக இருந்தது. இதனால் பாஜக கேலிக்குள்ளானது.

1,000 பொதுக்கூட்டம்
இதுதான் தமிழகத்தில் பாஜகவின் கள யதார்த்தம். இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய பட்ஜெட்டை விளக்க 1,000 பிரசார பொதுக் கூட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்து திகைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அடித்துவிட்ட தமிழிசை
திருச்சியில் நடத்திய ஒரு கூட்டத்துக்கே ஆள் கிடைக்காமல் திக்குமுக்காடிப் போனது பாஜக. இதில் 1,000 பிரசார பொதுக்கூட்டங்கள் என அடித்துவிட்டிருக்கிறார் தமிழிசை.

அசராமல் பேசிய தமிழிசை
1,000 பொதுக்கூட்டத்துக்கு ஆட்களை திரட்டுவது என்பது எத்தகைய பெரிய சவால் என்பதை நினைத்துக் கூட பார்க்காமல் அசர வைத்துவிட்டார் தமிழிசை. அனேகமாக 1,000 தெருமுனை பிரசார கூட்டங்களைத்தான் அப்படி பில்டப்பாக தமிழிசை கூறியிருப்பாரோ என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை.

தெருமுனை கூட்டம் போதும் பாஜகவுக்கு
தெருமுனை கூட்டம் என்றால் 5 பேர் இருந்தாலே போதும்... அதுதான் பாஜகவுக்கு பாதுகாப்பானதாகவும் கவுரமானதாகவும் இருக்கும். திருச்சியைப் போல திருகுவலியையெல்லாம் பாஜக தமிழகத்தில் தாங்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications