பிளஸ் டூவைப் போல 10- வகுப்புக்கு மாணவர்களுக்கும் ரேங்க் கிடையாது!
மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இனி ரேங்க் முறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்திலேயே முதன்முறையாக சிபிஎஸ்இ முடிவுகளை போல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் இனி ரேங்க் முறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும், அவர்களில் முதல் இடம் இரண்டாம் இடம் என்ற முடிவுகள் இருக்காது.

ஆனால் தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு மாநில அளவில், மாவட்ட அளவில் முதல் இடம் என்று மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் ரேங்க்கை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளின் வணிக போட்டியும் அதிகரித்து வந்தது. இதனை தவிர்க்கும் வகையிலும், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்கள் தற்கொலை, மனஉளைச்சலுக்கு ஆளாவதை தடுக்கவும் இந்த ரேங்க முறையை ஒழிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
நாளை பிளஸ் 2 தேர்வும் மே 19ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ள நிலையில் இனி ரேங்க் முறை கிடையாது, மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை மட்டும் தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் முதல் இடம், இரண்டாம் இடம் என கொண்டாடப்படுவதைத்தவிர வேறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, இது மாணவர்களுக்கு சிறப்பான அறிவிப்பு என்றும் அவர்களின் மன உறுதியை அதிகரிக்க வழிவகுக்கும் என்பது கல்வியாளர்கள் கருத்து,
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications