சதுரகிரி வெள்ளத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்: வாசன்
சென்னை: சதுரகிரிமலை வெள்ளத்தில் மூழ்கி உயிர் இழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில், அமாவாசையையொட்டி சதுரகிரி மலைக்குச் சென்றிருந்த பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேரில் 6 பேரின் சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பத்திரமாக மீட்கப் பட்டனர்.
இந்நிலையில், சதுரகிரி மலை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என த.மா.கா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் சதுரகிரி மலையில் திடீரென்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். இது மிகவும் துயரமான சம்பவம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு போதுமான மருத்துவ வசதியும் வழங்க வேண்டும். இதுவரை மீட்கப்பட்ட நபர்கள் பத்திரமாக வீடு திரும்புவதற்கு உண்டான ஏற்பாடுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். வெள்ளத்தால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications