குட்கா விற்பனைக்கு ரூ40 கோடி லஞ்சம்: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜுக்கு நெருக்கடி!
குட்கா விற்பனைக்கு ரூ40 கோடி லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்னை: குட்கா விற்பனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ரூ40 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக அறிக்கை தர வேண்டும் என தமிழக அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குட்கா விற்பனைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி குட்கா விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ரூ40 கோடி லஞ்சம்
குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியிருந்தனர். இந்த சோதனையில் சிக்கிய டைரி ஒன்றில் ரூ40 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது அம்பலமானது.

யார் யார்?
அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோரது பெயர்களும் இதில் அடிபட்டன. அண்மையில் வருமான வரித்துறையிடம் இது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு பெற்றிருந்தது.

திமுக புகார்
இந்த ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சட்டசபையில் பிரச்சனையை கிளப்பிய திமுக, ஆளுநர் வித்யாசகர் ராவிடமும் புகார் அளித்தது.

ஆளுநர் அறிக்கை
இந்நிலையில்தான் குட்கா விற்பனைக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் அறிக்கை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications