ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாலை மறியல் வாபஸ்.. 2 மணிநேரமாக ஸ்தம்பித்த போக்குவரத்து !
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாலை மறியலால் சென்ட்ரல் - பாரிமுனை இடையே கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்தவர்கள் திடீர் போராட்டத்தால் ஈடுபட்டதால் சென்னை சென்ட்ரல் பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்திலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் அந்த வழியாக போக்குவரத்து சீராகி வருகிறது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்டோர் 2 மணிநேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பாரிமுனை -சென்ட்ரல் இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் எக்மோர் வரையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து முத்துச்சாமி பாலம் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இதனால் ரயில் நிலையத்திற்கு செல்பவர்களும், மருத்துவமனைக்கு செல்பவர்களும் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிடக் கோரி நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனால் 2 மணிநேரமாக ஸ்தம்பித்திருந்த போக்குவரத்து தற்போது சீராகி வருகிறது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications