Breaking News: விடுதலையானார் சோபியா.. பல ஆயிரம் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு
Tamilnadu
oi-Veerakumar
By Veera Kumar
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், இன்று மாலை போலீசாரின் காவலில் இருந்து வெளியே வந்தார் மாணவி சோபியா. அவரை பல ஆயிரம் பேர் திரண்டு வந்து வரவேற்றனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில், விமானத்திற்குள் வைத்து, பாஜக தலைவர் தமிழிசையிடம், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என மாணவி சோபியா என்பவர் கோஷமிட்டதாக தமிழிசை கொடுத்த புகாரில் சோபியா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே தூத்துக்குடி கோர்ட்டில் இன்று சோபியாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு வெளியேறினார் சோபியா. அவரை வரவேற்க பல ஆயிரம் பேர் திரண்டு விட்டனர். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அத்தனை பேரும் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷம் போட்டபடி சோபியாவை வரவேற்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
Sep 04, 2018, 5:45 pm IST
தமிழிசை புகாரால் கைது செய்யப்பட்ட சோபியா விடுதலை செய்யப்பட்டார்
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சோபியா வீடு திரும்பினார்
சோபியாவை வரவேற்க பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்
பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று அத்தனை பேரும் கோஷம் போட்டதால் பரபரப்பு
Sep 04, 2018, 3:12 pm IST
பொது இடங்களில் குரல் எழுப்புவது குற்றமென்றால் அனைத்து அரசியல்வாதிகளும் குற்றவாளிகள்தான் -கமல்
அனைத்து அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டியவர்கள்தான்
சுதந்திர பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்
அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்- கமல் கேள்வி
Sep 04, 2018, 2:31 pm IST
சோபியா மீதான வழக்கை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
சோபியா கைது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
சோபியாவிற்கு மிரட்டல் விடுத்த பாஜகவினரை கைது செய்ய வேண்டும் - ஸ்டாலின்
கருத்து சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு உள்ளது - ஸ்டாலின்
Sep 04, 2018, 1:27 pm IST
இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வருகிறார் சோபியா
ஜாமீன் கிடைத்த நிலையில் மாலை வெளியே வருகிறார்
சோபியாவிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வாய்ப்புள்ளது
Sep 04, 2018, 11:59 am IST
தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்- சோபியா வழக்கறிஞர் பேட்டி
தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திலும் புகார் அளிப்போம்