பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய ட்வின்ஸ் சகோதரிகள்
பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
நெல்லை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டன. வழக்கம் போல மாணவிகள் அதிக தேர்வு பெற்றுள்ளனர். மொத்தம் 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.2 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், மாணவர்கள் தேர்ச்சி 92.5 சதவீதமாக உள்ளது.

தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்த இரட்டையர்களான ஜோனிகா வளன், ஜோஷிகா வளன் ஆகிய இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
இருவரும் 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் செண்டம் எடுத்துள்ளனர். அண்மையில் வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளின்போது சேலம், எடப்பாடியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளான கார்த்திகா, கீர்த்திகா 1,117 மதிப்பெண் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications