தேர்தல் முடியும் வரை அரசு திட்டங்களுக்குத் தடை...ஸ்ரீரங்கத்தில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இடைத்தேர்தலை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் அரசு திட்டங்களைச் செயல்படுத்த தடை பிறப்பித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, ''ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான காவல் பார்வையாளராக பினோத்குமாரும், பொது பார்வையாளராக உத்திர பிரதேசத்தினைச் சேர்ந்த பல்கார் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் இலவச வேஷ்டி சேலை வழங்கவோ, அம்மா திட்ட முகாம் நடத்தவோ கூடாது.
அதே சமயம், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடத்தவோ, குடியரசு தின விழாக்கள் நடத்தவோ தடையில்லை. தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications