பெண்களிடம் தவறாக நடந்தேனா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு: வைகை செல்வன்
தாம் பெண்களிடம் தவறாக நடந்ததாக கூறிவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப் போவதாக வைகைச் செல்வன் எச்சரித்துள்ளார்.
சென்னை: தாம் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால்தான் அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்தார் என கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடருவேன் என தினகரன் கோஷ்டி பேச்சாளர் வைகைச் செல்வன் எச்சரித்துள்ளார்.
அதிமுகவின் எடப்பாடி மற்றும் தினகரன் கோஷ்டிகளிடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் வைகைச்செல்வன் இடையேயான மோதல் உக்கிரமடைந்துள்ளது.
தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் வைகைச் செல்வன். இதற்கு பதிலடி கொடுத்த ராஜேந்திர பாலாஜி, ரூ500க்கு பேசும் கூலிப் பேச்சாளர் வைகைச் செல்வன்; அழுகிய தக்காளி என சாடினார்.

சினிமா போஸ்டர் ஒட்டியவர்
இதனைத் தொடர்ந்து வைகைச் செல்வன், ராஜேந்திர பாலாஜி சினிமா போஸ்டர் ஒட்டியவர் இன்று சினிமா துறைக்கே அமைச்சராகியிருக்கிறார் என காலைவாரினார். இதனிடையே சென்னையில் ராஜேந்திர பாலாஜி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அழுகிய தக்காளி
அப்போதும் வைகைச் செல்வனின் விமர்சனங்களுக்கு பதிலடி தந்தார் ராஜேந்திர பாலாஜி. வைகைச் செல்வன் ஒரு அழுகிய தக்காளி; சீக்குவந்த பிராய்லர் கோழி என ஏகத்துக்கும் வசைபாடினார்.

பெண்கள் பிரச்சனையால்..
பின்னர் பெண்கள் விஷயத்தில் தவறாக நடந்து கொண்டதால்தான் அவரது அமைச்சர் பதவியையே ஜெயலலிதா பறித்தார் என அதிரவும் வைத்தார். அத்துடன் தனியார் பால் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு தமக்கு எதிராக வைகைச் செல்வன் பேசுவதாகவும் குற்றம்சாட்டினார் ராஜேந்திர பாலாஜி.

ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு
இதற்கு பதிலளித்துள்ள வைகைச்செல்வன், தம் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளார். இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கும் கொண்டு செல்வேன் என்றார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications