ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பலிக்காது: வைகோ
சென்னை: இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது என்று தனது உரையில் கூறியுள்ளார் மதிமுக தலைவர் வைகோ.
வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியனை ஆதரித்து இன்று அவர் மன்னடியில் பிரச்சாரம் செய்து பேசினார்.
அப்போது பேசிய வைகோ, "நாடு முழுவதும் மாற்றம் நிகழ வேண்டும் என்ற அலை மக்களிடையே அதிகமாக வீச ஆரம்பித்து விட்டது.இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது.மாநில ஆட்சியில் உள்ளவர்களும் அது பற்றி கண்டுகொள்வதில்லை.நாங்கள் ஆட்சிக்கு வந்தால்தான் முல்லை பெரியாறு அணை பிரச்சனை தீரும்.முத்துக்குமாரின் கனவு நனவாகும்.

தவறான பொருளாதார கொள்கையை கொண்டுள்ள மத்திய அரசு மீண்டும் ஆட்சிக்கு எவ்வாறு வர இயலும்.மேலும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறைதண்டனை அனுபவித்த ராசா தேர்தலில் எப்படி போட்டியிட முடியும்? இது தேர்தல் விதிமுறைகளுக்கும்,மக்களுக்கும் எதிரான ஒரு செயலாகும்.
தேர்தலில் கூட்டணி என்ற பெயரில் சில கட்சியினர் துண்டு போட்டு பிரதமர் பதவியை பிடிக்க முயலுகின்றனர்.அதனால் எல்லாம் அப்பதவி கிடைத்துவிடாது.இந்தியாவில் தற்போது நடந்து வரும் ஆட்சி போன்ற ஒன்றை வேறு எந்த நாடும் பார்த்திருக்காது.
அதிமுக கூட்டணியிலான ஆட்சியின் பிரதமர் கனவு பலிக்க போவதில்லை. போயஸ் தோட்டத்தில் "மாதிரி" பாராளுமன்றம் கட்டினால்தான் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பலிக்கும். ஜெயலலிதா, தம் கட்சி அங்கம் வகிக்கப்போகிற கூட்டணி எது என்று தெளிவுபடுத்த வேண்டும்.
அண்ணா பதவி ஏற்றபோது அவரது குடும்பத்தினர் யாரும் தேர்தலில் பங்கேற்க கூடாது என உத்தரவே போட்டார். ஆனால், அவர் பெயரை சொல்லி கட்சி நடத்தும் திராவிட கட்சிகள் அப்படித்தான் நடந்துகொள்கிறார்களா? பாஜக தலைமையிலான கூட்டணிதான் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க போகின்றது" என்று பேசினார் அவர்.
-
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications