ஓஎன்ஜிசி குழாய் உடைந்த மாதிரிமங்கலத்தில் வைகோ- மக்களை திரட்ட முகாமிடுவேன் என அறிவிப்பு!
மயிலாடுதுறை மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் உடைந்த இடத்தை மதிமுக பொதுச்செயலர் வைகோ பார்வையிட்டார்.
கும்பகோணம்: மயிலாடுதுறை குத்தாலம் அருகே உள்ள மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று பார்வையிட்டார். அப்போது, ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்களை திரட்டும் வரை அங்கேயே முகாமிடப் போவதாகவும் வைகோ அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியில் ஓஎன்ஜிசி சார்பில் கச்சா எண்ணெய் குழாய் அமைக்கப்பட்டிருக்கிறதுது. தற்போது குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் உள்ள ஓஎன்ஜிசி குழாயில் இன்று காலை உடைப்பு ஏற்பட்டது.

4-வது முறையாக உடைப்பு
கச்சா எண்ணெய் கசிவை கண்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர். மாதிரிமங்கலத்த்தில் 4-வது முறையாக ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாய் உடைந்துள்ளது.
வைகோ
இந்த எண்ணெய் குழாய் உடைந்த பகுதியை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காவிரி தீரத்துக்கு மக்களை திரட்டுவதற்காக இங்கேயே நான் இருப்பேன்.... விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

எச்சரிக்கை
கலிங்கபட்டியில் நடந்த மதுவிலக்கு போராட்டம் போல இந்த ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டமும் எழுச்சி பெறும். காவல்துறை எங்களை அடக்கினால் மத்திய அரசின் கைக்கூலி என விமர்சிப்பேன் என்றார்.

வழக்கு போடுங்கள்
முன்னதாக கும்பகோணம் தாராசுரத்தில் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், போராட்டத்தை தூண்டுவோர் மீது வழக்கு தொடுப்போம் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் மிரட்டியுள்ளது. நானே போராட்டத்தை தூண்டிவிட்டேன். ஓஎன்ஜிசி வெளியேறாவிட்டால் கருவிகளை உடைப்பேன். என் மீது வழக்கு தொடரட்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications