ஜெனீவாவிலிருந்து சென்னை திரும்பிய வைகோவுக்கு உற்சாக வரவேற்பு
ஜெனீவாவிலிருந்து சென்னை திரும்பிய மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை: ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில் பங்கேற்று ஈழத் தமிழர்கள் குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு வைகோ நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த அமர்வில் பங்கேற்று ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை ஒலிப்பதற்காக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ செப்டம்பர் 17- ஆம் தேதி ஜெனீவா சென்றடைந்தார்.

இலங்கை தமிழர்களுக்கான உரை
செப்டம்பர் 18 ஆம் தேதி உரையாற்றிய வைகோ, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் சோக வரலாற்றை எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் 3 முறை பேசிய வைகோ ஈழத்தமிழர்களின் அரசியல் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டியதன் தேவையை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார்.

வைகோ மீது ஐ.நா.மன்றத்தில் தாக்குதல் முயற்சி
ஐ.நா. மனித உரிமை மன்றத்திலேயே வைகோவை சூழ்ந்து கொண்ட சிங்களர், இனப்படுகொலைக்கு எதிராக பேசியமைக்கு தாக்க முயன்றனர். இதையடுத்து அவருக்கு ஐ.நா.சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆலோசனை கூட்டங்களை முடித்துக் கொண்டு ஜெனீவாவிலிருந்து நேற்றிரவு வைகோ சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் மதிமுக தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டி
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கடந்த 16 ஆண்டுகளில் 4 முறை சுவிட்சர்லாந்து செல்ல விசா மறுக்கப்பட்டது. ஜெனீவா பயணம் பயனுள்ளதாக அமைந்ததற்கு உதவிய அனைத்து தமிழ் ஊடகங்களுக்கும் நன்றி.

ராஜபக்சே குற்றவாளி
இலங்கை பிரச்சனைக்கு தீர்வு தனி ஈழம் வேண்டும் என்று மனித உரிமை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தினேன். இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஏதுவாக ஐ.நா பொதுச்செயலாளரை அனுப்ப வேண்டும் என மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பேசினேன் என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications