For Daily Alerts
Just In
விருதுநகர்: சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் பலி
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் பலியாகிவிட்டனர்.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே ராமசந்திராபுரத்தில் வேன் கவிழ்ந்து 6 பேர் பலியாகிவிட்டனர்.
ராமசந்திராபுரத்தில் இருக்கங்குடியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு ஒரு வேனில் 15-க்கும் மேற்பட்டோர் சென்றனர். அவர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ராமசந்திராபுரத்தில் வரும் போது நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகிவிட்டனர்.
மேலும் காயமடைந்த 10 பேர் சாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments
English summary
A van which travels from Irukkangudi Mariyamman temple collapsed. 6 were died in this incident. 10 were injured and admits in Sathur GH.
Story first published: Sunday, May 13, 2018, 15:41 [IST]