திமுக கூட்டணியில் தேமுதிக சேர மீண்டும் திருமாவளவன் அழைப்பு
அரியலூர்: திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
பாரதிய ஜனதா கட்சி வகுப்புவாத கட்சி. அது ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது.

ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரதிய ஜனதாவும் காங்கிரஸும் ஒரே நிலைப்பாடு கொண்டிருக்கின்றன. இலங்கைத் தமிழர் விடுதலைக்கு பாடுபடுவோம் என்று பாஜகவினர் சொல்வது ஏமாற்றும் செயல்.
தேசிய அளவில் 3வது அணி என்பது எப்போதும் வெற்றிகரமானதாக இருந்தது இல்லை. தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே கோரிக்கையை தேமுதிகவிடம் மீண்டும் வலியுறுத்த கடமைப்பட்டுள்ளேன். தே.மு.தி.க. ஜாதி, மதவெறி கட்சிகளுடன் இணைந்து விடக் கூடாது.
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற குரல் நேரு காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அம்பேத்கர் இது சமூக நீதிக்காக என விளக்கமளித்து தெளிவுபடுத்தினார். ஜாதி பெயரால் தீண்டாமை என்ற நிலை மாறும் வரை இடஒதுக்கீடு இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக ஒதுக்கினால் அது சமுக நீதியாகாது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள சமூக அந்தஸ்து மாறுபடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அந்தஸ்து கிடைக்கும் வரை இந்த இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீட்டை எதிர்க்க யார் துணிந்தாலும் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கும் என்று சோனியா காந்தி அறிவித்துள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
நான் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். தி.மு.க. அணிக்கு தே.மு.தி.க., வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். தே.மு.தி.க. ஜாதி, மதவெறி கட்சிகளுடன் இணைந்து விட கூடாது.
இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications