மாநிலங்களுக்கு இப்படி நிதி ஒதுக்கலாமே: இது தான் விஜயகாந்த்தின் பரிந்துரை!
சென்னை: மாநில வளர்ச்சிக்கு ஏற்ப நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிதிக்குழுவிடம் பரிந்துரை செய்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 14வது நிதிக்குழுவிடம் சில பரிந்துரைகளை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,

வரி வருவாய்க்கான ஆதாரங்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு செய்து, முறையாக அவற்றை மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு இடையே சமமாகவும், நெறிமுறையோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும். சம்பிரதாயத்திற்காக ஒன்று அல்லது இரண்டு சதவீதங்களை மாநில ஒதுக்கீட்டிற்கு கூடுதலாக ஒதுக்காமல், மாநில வளர்ச்சிக்கு ஏற்ப நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
மாநில தனிநபர் மொத்த வருவாய் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும்போது, 1971-ம் ஆண்டுக்கு பிறகு மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படுகிறது. அதில் தமிழ்நாடும் ஒன்று. இதற்கு மாற்றாக மாநில தனி நபர் வருவாயோடு, மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநில அரசுகளை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகை அளித்திடும் வகையில் புதியதோர் வழிவகை காண வேண்டும்.
மத்திய அரசு விதித்த குறிப்பு விதிமுறைகள் அடிப்படையில் தான் நிதிக்குழு மாநிலங்களிடையே ஆய்வு செய்ய முடிகிறது. இது மறைமுகமாக மத்திய அரசு நிதிக்குழுவிற்கு ஒரு கட்டுப்பாட்டை விதிப்பதாகும். இதை நீக்கிவிட்டு, கூட்டாட்சி தத்துவத்தை மனதில் கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான நிதி பகிர்மானத்தை நிதிக்குழுவே தீர்மானிக்கிற அதிகாரம் வழங்க வேண்டும்.
எந்த மாநிலத்தில் இருந்து எவ்வளவு கல்வி வரி மத்திய அரசால் வசூலிக்கப்படுகிறதோ, அதை அந்த மாநிலங்களுக்கே முழுமையாக அளித்திட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications