விளாத்திக்குளம் மாணவி கொலை! "குழந்தையை சீரழிக்க எப்படி மனம் வந்தது?" கொடூரன் வீட்டை சூறையாடிய மக்கள்
விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரது வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.
கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 17 வயது பிளஸ்-2 மாணவி, மறுநாள் காலை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (37) என்பது அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

குற்றவாளி தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும், அவரது சொந்த ஊரான சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு கொதிப்பில் இருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் திரண்டு சென்று, தர்ம முனீஸ்வரனின் வீட்டைச் சூழ்ந்தனர்.
வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் உள்ளே இருந்த பொருட்களைக் கற்களைக் கொண்டு எறிந்தும், கம்பிகளால் தாக்கியும் சூறையாடினர்.
நிலைமை கைமீறிச் சென்றதால், அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், மக்களின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த போலீசார் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கொலையாளி சிக்கியது எப்படி?
சம்பவ இடத்திற்கு அருகே 9-ம் தேதி முதல் நின்றிருந்த ஒரு பைக், ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருடப்பட்டது எனத் தெரியவந்தது. சிசிடிவி காட்சிகள் மூலம் அதை முனீஸ்வரன் தான் ஓட்டி வந்தது உறுதியானது.
முன்னாள் கைதி: ஏற்கனவே 2020-ல் ஒரு மூதாட்டியைக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற இவர், உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளார்.
மாணவியின் உடலை வாங்க மறுத்து 10 நாட்களாகப் போராடி வந்த உறவினர்கள், தற்போது குற்றவாளி கைது செய்யப்பட்டதையடுத்து உடலைப் பெற்றுக் கொள்ளச் சம்மதித்துள்ளனர். எனினும், ரவுடியின் வீடு சூறையாடப்பட்ட சம்பவத்தால் சாயல்குடி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications