5 உயிர்களை குடித்த சென்னை ரயில் பாதை தடுப்புச் சுவர் இடிப்பு
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தடுப்புச் சுவரை ஊழியர்கள் இடித்து தள்ளினர்.
சென்னை: சென்னை பரங்கிமலை-பழவந்தாங்கல் ரயில் நிலையங்கள் நடுவேயான பாதையில் உள்ள தடுப்புச் சுவர் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று இடிக்கப்பட்டது.
சென்னையில் கடற்கரையிலிருந்து திருமால்பூர் நோக்கி மின்சார ரயில் கடந்த 24-ஆம் தேதி சென்று கொண்டிருந்தது, அப்போது மாம்பலம், கோடம்பாக்கம் புறநகர் ரயில் நிலையங்கள் இடையே உள்ள உயர் அழுத்த மின்கம்பி காலை அறுந்து விழுந்தது.

இதையடுத்து ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்நிலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில ரயில்கள் விரைவு ரயில் செல்லும் பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் திருமால்பூருக்கு ரயில் இல்லாததால் அந்த ரயிலில் கூட்டம் அலைமோதியது.

இதனால் பலர் ரயிலில் தொங்கிக் கொண்டு சென்றனர். அப்போது பரங்கிமலை-பழவந்தாங்கல் இடையே இருந்த தடுப்புச் சுவர் குறித்து பயணிகள் அறியாததால் வெளியே தொங்கி கொண்டிருந்தவர்கள் முதுகில் மாட்டியிருந்த பை அந்த தடுப்புச் சுவரில் இடித்து சிலர் கீழே விழுந்தனர்.

இவர்களில் 5 பேர் பலியாகிவிட்டனர். இதையடுத்து பாதையை மாற்றிவிடும் போது பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் தடுப்புச் சுவர் குறித்து எச்சரிக்கை விடப்பட்டிருக்க வேண்டும் என்றும் ரயில் நிலையத்தில் உள்ள தடுப்புச் சுவரை இடிக்க வைண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து ரயில் நிலையங்களில் ஆபத்தான நிலையில் உள்ள சுவர்களை இடிக்க தெற்கு ரயில்வே பொது மேலாளர் உத்தரவு பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து பரங்கிமலை-பழவந்தாங்கல் நடுவே இருந்த தடுப்புச் சுவரும் அகற்றப்பட்டது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications