ரஜினி நாளை அறிவிக்கப் போவது இதுதானா?
ரஜினி மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை அறிவிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

சென்னை : ரஜினி மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை அறிவிக்க போகிறார் என்ற கருத்து பரவலாக உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது பேசப்பட்டு வந்தன. அவருக்கும் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
இந்நிலையில கடந்த மே மாதம் அவர் ரசிகர்களை சந்தித்த போது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறியிருந்தார். அதுபோல் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும், போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

கட்சி பணிகளில் மும்முரம்
சுமார் 6 மாத காலமாக ரஜினி தான் தொடங்கவுள்ள கட்சிக்கு கொடி, சின்னம், பெயர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். முதல் நாளான 26-ஆம் தேதி ரசிகர்களிடையே ரஜினி பேசியபோது, எனது அரசியல் நிலைப்பாட்டை 31-ஆம் தேதி அறிவிப்பேன் என்றார்.

எதிர்பார்ப்பில் மக்கள்
நாளை ரஜினி என்னதான் அறிவிக்க போகிறார் என்பது குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரஜினி மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கவுள்ளதாக பேச்சுகள் அடிபடுகின்றன.

கட்சி ரெடி
கட்சி ரெடியாகிவிட்டது. ஆனால் போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று மீண்டும் கூறலாம் என்ற கருத்துகளும் பரவலாக பேசப்படுகிறது. இதன் மூலம் ஈயம் பூசியது மாதிரியும் பூசாத மாதிரியும் இருக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பெரும் எதிர்பார்ப்பில் தமிழகம்
இன்றைய ரசிகர்கள் சந்திப்பில் கனவு காணும்போது நிறைவேறாவிட்டால் வருத்தப்பட கூடாது என்றும் ரஜினி தெரிவித்துள்ளார். இது சாதாரண அறிவுரையாகவே பார்க்கப்பட்டதாலும் சிலர் இதற்கும் புது அர்த்தம் கற்பிக்கின்றனர். எனவே ரஜினியின் "கொடி" பறக்குமா என்பது நாளை தான் தெரியவரும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications