வாட்ஸ் அப் ஒயர எலி கடிச்சிடுச்சாம், போய் வேலையப் பாருங்கப்பா!.... டுவிட்டர் கலகல!
உலகம் முழுவதும் வாட்ஸ் அப் ஒரு மணி நேரம் தடைபட்டதையடுத்து அது குறித்து டுவிட்டரில் கருத்துகள் பறக்கின்றன.
சென்னை : சர்வர் கோளாறு காரணமாக ஒரு மணி நேரமாக வாட்ஸ் அப் செயல்பாடு முடங்கியது. இதனை கிண்டலடிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிடப்படும் சில சுவாரஸ்ய கருத்துகள்.
வாட்ஸ் அப் சமூக வலைதளம் உலகம் முழுவதும் இன்று ஒரு மணி நேரம் தடை பட்டது. இதனால் பலரும் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து வாட்ஸ் அப் பிரச்சினை குறித்து #whatsappdown என்ற ஹேஷ்டேக் கீழ் தகவல் பரிமாறப்பட்டதால் சில மணித்துளிகளிலேயே அந்த ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டானது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ் சர்வர் டவுன் ஆனதால் இந்த இடையூறு ஏற்பட்டதாக தெரிகிறது. எனினும் 50 நிமிடங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப் மீண்டும் செயல்படத் தொடங்கியது. எனினும் அதற்குள்ளாகவே நம்முடைய நெட்டிசன்களை வாட்ஸ் அப் நிலவரம் குறித்து கலகல பதில்களை பதிவிட்டுள்ளனர்.
அடேய் வாட்ஸ்அப் சர்வர் ஒயர எலி கடிச்சிடுச்சாம். அதான் அந்த ஒயர மாத்திருக்காங்க. போங்கடா போய் பொழப்ப பாருங்கடா என்று கலாய்க்கிறார் இவர்.
அடேய் வாட்ஸ்அப் சர்வர் ஒயர எலி கடிச்சிடுச்சாம். அதான் அந்த ஒயர மாத்திருக்காங்க. போங்கடா போய் பொழப்ப பாருங்கடா.
— 💖I ❤ MY இளவரசி💖 (@RKB_rocking) November 3, 2017
பன்னி காய்ஸ் 😆😆😆😆
இன்டர்நெட் உலகில் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் இல்லாத ஒரு நிலை வந்துவிட்டது. ஆனால் ஒரு மணி நேரம் வாட்ஸ் அப் தடைபட்டுபோனதற்கே பலர் பதறிவிட்டனர். இதனை குறிப்பிடும் விதமாக பதிவிடப்பட்டுள்ளது இந்த கருத்து. வாட்ஸ்அப் முடங்குன மாதிரி ஃபேஸ்புக் டுவிட்டரும் முடங்குனா நிம்மதியா இருக்கலாம்
வாட்ஸ்அப் முடங்குன மாதிரி ஃபேஸ்புக் டுவிட்டரும் முடங்குனா நிம்மதியா இருக்கலாம்😂😂😂
— sheik sikkanthar (@sheik_twitts) November 3, 2017
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications