இதற்காகத்தான் ஜெ. தீபா பேரவை... பொங்கும் அம்மா விசுவாசிகள்
72 நாட்கள் அப்போலோவில் நடந்ததை வெளியிடாத சசிகலாவை ஏற்க மறுத்து ஜெ. தீபா பேரவை தொடங்கியுள்ளதாக சேலம் அதிமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம்: ஜெயலலிதா அப்போலோவில் இருந்த 72 நாட்கள் அங்கு என்ன நடந்தது என்று சசிகலா இதுவரை தெரிவிக்கவில்லை. மேலும், அவர் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு பொருத்தமானர் அல்ல என்றும் கூறி சசிகலாவை ஏற்க மறுத்து ஜெ. தீபா பேரவையை சேலத்தில் அதிமுக தொண்டர்கள் உருவாக்கியுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்து கடந்த 5ம் தேதி மரணமடைந்தார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து அந்தக் கட்சிக்குள் யார் அடுத்த தலைமை என்ற விவாதம் எழுந்தது. இதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளர் என்று கூறியுள்ளனர்.

ஆனால் இதற்கு கடுமையான எதிர்ப்பு அடித்தள தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல இடங்களில் சசிகலாவின் போஸ்டர்கள் கிழக்கப்படுவதும், சாணி அடிப்பதும் என தங்களது எதிர்ப்பை தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தில் ஜெ. தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள் இந்தப் பேரவையைத் தொடங்கியுள்ளனர். ஜெ.தீபாவை அதிமுகவிற்கு தலைமையேற்க அழைப்பு விடுத்துள்ள இந்த பேரவை, 60 வார்டில் உள்ள அதிமுகவினரை இந்தப் பேரவையில் இணைக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதா போன்ற உருவ சாயலை கொண்டுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் ரத்த உறவு இவர் மட்டும்தான் என்று கூறும் சேலம் அதிமுக தொண்டர்கள், 72 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா பற்றி எந்தத் தகவலையும் வெளியிடாத சசிகலா எங்களுக்கு தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும், எம்ஜிஆர் உடல் நலம் இல்லாமல் இருந்த போது வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்தது போல் ஜெயலலிதாவை ஏன் அழைத்துச் செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் சசிகலாவை ஏற்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் அரசியல் வருகைக்கு முக்கியமான பங்காற்றிய சேலம் மாவட்டத்தில், தற்போது தீபாவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications