கருணாநிதி பற்றி மோசடி புகார்களை கொடுத்தும் ஏன் ரெய்டு இல்லை? சு.சாமி கேள்வி
கருணாநிதி, அவரது மகள் முறைகேடுகள் தொடர்பாக கொடுத்த 30 பக்கம் ஆவணத்தை வைத்து ஏன் ரெய்டு நடத்தவில்லை என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சீறியுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகள் முறைகேடுகள் தொடர்பாக கொடுத்த 30 பக்கம் ஆவணத்தை ஏன் ரெய்டு நடத்தவில்லை என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சீறியுள்ளார்.
சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான 190 இடங்களில் நாடு முழுவதும் வருமான வரி சோதனை நடைபெற்றது. சசிகல குடும்பத்தின் முக்கியமான நபர்கள் வீடுகள், நிறுவனங்கள் அனைத்தும் சல்லடை போட்டு அலசப்பட்டு வருகின்றன.
In addition to data on Sasikala in the courts I had given a 30 page Note to Authorities on MK’s and daughter’s frauds. Why no raids yet ?
— Subramanian Swamy (@Swamy39) November 9, 2017
இந்நிலையில் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி இன்று ட்விட்டரில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். அதில், கருணாநிதி மற்றும் அவரதுமகள் முறைகேடுகள் தொடர்பாக 30 பக்க ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுத்திருந்தேன்.. அங்கே சோதனை நடத்ஹ்டவில்லையே என பொங்கியுள்ளார்.