வெளிநாட்டு வேலைக்கு ஆசை- ஆஸ்திரேலிய நிறுவனத்திடம் 9.40 லட்ச ரூபாய் ஏமாந்த வாலிபர்!
அரக்கோணம்: அரக்கோணத்தில் வெளிநாட்டு வேலைக்காக ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிடம் ஆன் - லைனின் 9.40 லட்சம் அளித்து ஏமாந்த இளைஞர் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தை சேர்ந்தவர் ஜெகன். டிப்ளமோ படித்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பி இணையதளம் மூலம் வேலை தேடிவந்தார்.
மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பம்:
அப்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று அவருக்கு ஆன்-லைனில் விண்ணப்பம அனுப்பியுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்த ஜெகன் ஆன்-லைனில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தார்.
9.40 லட்ச ரூபாய் டெபாசிட்:
அதை பெற்றுக் கொண்ட நிறுவனம் ரூபாய் 9.40 லட்சத்தை வங்கியில் செலுத்தினால் வேலைக்கு உத்தரவு வரும் என்று தெரிவித்துள்ளது.
நம்பி செலுத்திய வாலிபர்:
அதை நம்பி 4 தவணைகளில் ஜெகன் தக்கோலத்தில் உள்ள வங்கி கிளையில் ரூபாய் 9.40 லட்சம் செலுத்தியுள்ளார்.
வேலை உத்தரவு கிடைக்கவில்லை:
ஆனால் அதனைத் தொடர்ந்து பலமுறை முயன்ற போதும் அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருக்கு வேலை உத்தரவும் வழங்கவில்லை.
நிறுவனம் குறித்து விசாரணை:
இதுகுறித்து ஜெகன் தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்ற போலீஸார் சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆஸ்திரேலிய நிறுவனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.