வெளிநாட்டு வேலைக்கு ஆசை- ஆஸ்திரேலிய நிறுவனத்திடம் 9.40 லட்ச ரூபாய் ஏமாந்த வாலிபர்!
அரக்கோணம்: அரக்கோணத்தில் வெளிநாட்டு வேலைக்காக ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிடம் ஆன் - லைனின் 9.40 லட்சம் அளித்து ஏமாந்த இளைஞர் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தை சேர்ந்தவர் ஜெகன். டிப்ளமோ படித்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பி இணையதளம் மூலம் வேலை தேடிவந்தார்.
மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பம்:
அப்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று அவருக்கு ஆன்-லைனில் விண்ணப்பம அனுப்பியுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்த ஜெகன் ஆன்-லைனில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தார்.
9.40 லட்ச ரூபாய் டெபாசிட்:
அதை பெற்றுக் கொண்ட நிறுவனம் ரூபாய் 9.40 லட்சத்தை வங்கியில் செலுத்தினால் வேலைக்கு உத்தரவு வரும் என்று தெரிவித்துள்ளது.
நம்பி செலுத்திய வாலிபர்:
அதை நம்பி 4 தவணைகளில் ஜெகன் தக்கோலத்தில் உள்ள வங்கி கிளையில் ரூபாய் 9.40 லட்சம் செலுத்தியுள்ளார்.
வேலை உத்தரவு கிடைக்கவில்லை:
ஆனால் அதனைத் தொடர்ந்து பலமுறை முயன்ற போதும் அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருக்கு வேலை உத்தரவும் வழங்கவில்லை.
நிறுவனம் குறித்து விசாரணை:
இதுகுறித்து ஜெகன் தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்ற போலீஸார் சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆஸ்திரேலிய நிறுவனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications