இதெல்லாம் ஒரு பிரச்சினையாங்க? துரை வைகோ முன்னிலையில் மோதிக் கொண்ட மதிமுகவினர்! பரபரத்த தேனி!
தேனி : தேனியில் டிக்கெட் பெறுவதில் மதிமுக நிர்வாகிகளில் இரு தரப்பினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ முன்னிலையிலேயே மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கட்சி நிர்வாகிகளை துரை வைகோ சமாதானப்படுத்தினார்.
மதிமுக பொது செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தி எடுக்கப்பட்ட 'மாமனிதன் வைகோ' என்ற ஆவனப்படத்தை வைகோவின் மகனும், மதிமுக தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோ தயாரித்து அதனை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கட்சியினருக்கு திரையிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இதன் ஒருபகுதியாக தேனியில் உள்ள வெற்றி திரையரங்கில் மாமனிதன் ஆவணபடத்தை மதிமுக சார்பில் திரையிடுவதற்காக ஏற்பாடுகளை தேனி மாவட்ட மதிமுகவினர் செய்து இருந்தனர்.

துரை வைகோ
இதில் வைகோவின் மகனும், மதிமுகவின் தலைமை கழக செயலாளருமான துரை வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த ஆவண படத்தை பார்ப்பதற்காக மதிமுக சார்பாக இந்த திரையரங்கில் அனைத்து டிக்கெட்டுகளை மதிமுக தேனி மாவட்ட பொறுப்பாளர் கே,ராமகிருஷ்னன் பெற்று அதனை மதிமுகவினருக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தார்.

டிக்கெட் பிரச்சினை
அந்த சமயம் அதன் அருகில் துரை வைகோ கட்சி நிர்வாகிகளிடம் பேசி கொண்டு இருந்தார். அப்போது ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் ராமகிருஷ்ணனிடம் டிக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவரை ராமகிருஷ்ணன் தரக்குறைவான வார்த்தைகளால் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நிர்வாகியும் ராமகிருஷ்ணனை அடிக்க பாய்ந்து ஒருமையில் திட்டினார்.

துரை வைகோ சமாதானம்
இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. இவர்கள் இருவரையும் கட்சி நிர்வாகிகள் விலக்கி விட முயற்சி செய்த நிலையில் அங்கிருந்த துரை வைகோ அவர்களிடம் பேசி சமாதானம் செய்து அவர்களை திரையரங்கிற்குள் படம் பார்க்க அனுப்பி வைத்தார். மதிமுகவினரின் இந்த பிரச்சனையினால் தியேட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துரை வைகோவின் முன்னால் மதிமுகவினர் மோதி கொண்ட சம்பவம் மதிமுகவில் தேனி மாவட்டத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

உட்கட்சி பூசல்
கட்சியில் பணி செய்யாமல் இருப்பவர்கள் துரோகம் செய்பவர்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது. வெளியே செல்லலாம் என துரை வைகோ கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் துரை வைகோவுக்கு கண்டனம் தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். இதை அடுத்து அந்த மாவட்டத்தில் கட்சி கலைக்கப்படுவதாக துரை வைகோ கூறியிருந்தார். பல மாவட்டங்களிலும் துரை வைகோவுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகள் மீது சக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் அந்த வகையிலேயே தேனியிலும் உட்கட்சி பூசல் அரங்கேறி இருக்கிறது என்கின்றனர் நம்மிடம் பேசிய மதிமுக நிர்வாகிகள்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications