அட.. ஓமிக்ரான் ஓடிப்போயிரும்.. நம்மகிட்ட மருந்து இருக்கு! ஆய்வு தீவிரம்.. சொல்கிறார் பிச்சையா குமார்
ஓமிக்ரான் லைரஸ் தொற்றுக்கு கபசுர குடிநீர் பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் கூறியுள்ளார்.
திருநெல்வேலி: கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் ஆகியவை மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற மருந்துகளில் ஒன்று, இதனை மக்கள் அனைவரும் பயன்படுத்தி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் கூறியுள்ளார். ஓமிக்ரான் லைரஸ் தொற்றுக்கு கபசுர குடிநீர் பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் பிச்சையா குமார் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் கடந்த 2 ஆண்டுகாலமாக கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் அலை வீசியதில் பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இப்போது ஓமிக்ரான் வைரஸ் உலகத்தின் பல நாடுகளில் வீரியமாக பரவி வருகிறது. ஓமிக்ரான் பரவினால் இந்தியாவில் தினசரி 15 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் சித்த மருத்தவம் பல வைரஸ் நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது. நிலவேம்பு குடிநீர், கபசுர கசாயம் போன்றவை கொரோனா காலத்தில் பலருக்கும் கை கொடுத்தது. ஓமிக்ரான் பரவல் அச்சம் எழுந்துள்ள இந்த நேரத்தில் கபசுர குடிநீர் பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் கூறியுள்ளார்.

சித்த மருத்துவ திருநாள்
இந்திய மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத் துறை சார்பில் ஐந்தாவது சித்த மருத்துவ திருநாள், நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சித்த மருந்துகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மருந்துகளின் கண்காட்சி அரங்குகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது, சித்த மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் சித்த மூலிகை கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

நிலவேம்பு குடிநீர்
இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் கலந்துகொண்டு சித்த மருந்து கண்காட்சி மற்றும் சித்த மூலிகை கண்காட்சியை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள், சித்த மருத்துவ ஆர்வலர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார், கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் ஆகியவை மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற மருந்துகளில் ஒன்று, இதனை மக்கள் அனைவரும் பயன்படுத்தி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தொற்று நோய்களுக்கு மருந்து
தற்போதைய நிலையில் சித்த மருத்துவ நிறுவனங்கள் அதிகரித்து வருவதாகவும், நாள்பட்ட நோய்களுக்கு மட்டுமே சித்த மருந்து என்ற நிலை மாறி நீரழிவு நோய் , தொற்று நோய்களுக்கும் சித்த மருந்துகளில் நல்ல பலன் கிடைப்பதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மருந்துகளில் கவனம்
கொரோனா காலத்திற்கு பின் சித்த மருத்துவ நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இன்றைய நிலவரப்படி, 408 சித்த மருத்துவ நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை அல்லாத இடங்களில் சித்த மருந்துகளைப் பெற்று பொதுமக்கள் உபயோகிக்கும் போது மருந்து தயாரிப்பதற்கான உரிமம், மருந்துக்கான சான்றிதழ்கள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பின்னர் பொதுமக்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பூரண குணமடைந்த நோயாளிகள்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 வது அலையில் சித்த மருத்துவமனை மூலம் 69 மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது, சுமார் 50 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொண்டு குணம் அடைந்தார்கள். இவர்களுக்கு சித்த மருந்து மட்டுமே மருந்தாக கொடுக்கப்பட்டு நோய்த் தன்மை குறைக்கப்பட்டு பூரண நலம் பெற செய்யப்பட்டது. சித்த மருத்துவ முறையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 0.01% மட்டுமே சிக்கலான நிலைக்கு நோயாளிகள் சென்ற பரிந்துரை விகிதம் எனவும் பிச்சையா குமார் கூறினார்.
Recommended Video

ஓமிக்ரானுக்கு கபசுர குடிநீர்
மனிதர்களின் உடலில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை பரவாமல் தடுக்கும் மருந்தாக கபசுர குடிநீர் வழங்கபட்டு வருகிறது. ஒமிக்ரான் நோய்க்கு கபசுர குடிநீர் பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சி நடந்து வருகிறது. கபசுரக் குடிநீர் நல்ல மருந்தாக செயல்படும் சர்வதேச அளவில் கபசுரக் குடிநீருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் பிச்சையா குமார் தெரிவித்தார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications