குப்பையில் கிடந்த 20 பவுன்! பத்மாவை போல் நேர்மையாளர் துரை! திருவாரூர் தூய்மை பணியாளரின் தூய உள்ளம்!
திருவாரூர்: திருவாரூரில் தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 20 பவுன் நகை, 1 கிலோ வெள்ளியை பெண் ஒருவர் தவறவிட்ட நிலையில் அதை தூய்மை பணியாளர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் துரை. இவர் திருவாரூர் நகராட்சித் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஒரு பை இருப்பதை கண்டார்.

அதில் ஏதோ இருப்பதை உணர்ந்த அவர், அதை பிரித்து பார்த்து அதிர்ந்து போனார். அதில் 20 பவுன் தங்க நகையும் 1 கிலோ வெள்ளியும் இருந்தது. அதை பார்த்ததும் அவருக்கு கையும் ஓடலை காலும் ஓடலை!
இதையடுத்து அந்த நகையை பார்த்ததும் சற்றும் சபலப்படாத துரை, உடனே அவற்றை எடுத்துக் கொண்டு திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீஸார் , துரையை வெகுவாக பாராட்டினர்.
போலீஸ் விசாரணையில், சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ராதாகிருஷ்ணன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வந்திருந்தனராம். அப்போது அவர்கள் 20 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளியை தவறவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து ராதாகிருஷ்ணன் குடும்பத்தினரும் திருவாரூர் நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில்தான் துரை, அந்த நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையறிந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர், துரையை அழைத்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் ராதாகிருஷ்ணன், தனது மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த நகைகளாம். இந்த நகைகள் கிடைத்ததும் அவரது மனைவி ஆனந்தத்தில் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications