Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மா கோலம் போட்ட ரோஜா..மகரசங்கராந்தி விழாவில் சுவாரஸ்யம்..சேவல் சண்டையும் விறுவிறு

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: மகர சங்கராந்தி விழாவை முன்னிட்டு ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா திருப்பதியில் நடைபெற்ற விழாவில் மா கோலம் போட்டு அசத்தினார். சேவல் சண்டையை உற்சாகமாக தொடங்கி வைத்தார். சூரியனின் மகர ராசி பிரவேசத்தை தான் மகர சங்கராந்தியாக நாம் கொண்டாடுகிறோம். தமிழ்நாட்டில் தை பொங்கல் போல ஆந்திராவில் மகர சங்கராந்தி விழா கொண்டாடப்படுகிறது.

மகர சங்கராந்தி விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஆந்திராவில் ஆங்காங்கே கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. திருப்பதியில் உள்ள காவல்துறை மைதானத்தில் இன்றைய தினம் ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா தலைமையில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்டது.

Minister Roja Inaugurated The Sankranti Celebrations in Tirupati

சங்கராந்தி நிகழ்ச்சியில் திருப்பதி ஆட்சியர் வெங்கட்ரமணா, எஸ் பி பரமேஸ்வர ரெட்டி, மற்றும் காவல்துறையினர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அமைச்சர் ரோஜா மாக்கோலம் போட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து விதவிதமாக போடப்பட்ட கோலங்களைப் பார்வையிட்ட அவர், சேவல் பந்தயம், கபடி போட்டி உள்ளிட்ட சங்கராந்தி சம்பிரதாய நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தார். சேவல்கள் சண்டை போட்டதைப் பார்த்து உற்சாக குரல் எழுப்பினார் ரோஜா.

Minister Roja Inaugurated The Sankranti Celebrations in Tirupati

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரோஜா, சங்கராந்தி பண்டிகை நமது வாழ்க்கை, கலாச்சாரம் ஆகியவற்றுடன் தொடர்பு உடையது. இந்த நேரத்தில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திருவிழா நாட்களில் கூட காவல்துறையினர் தங்களின் குடும்பத்தினருடன் பங்கேற்க முடியாமல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருப்பதி எஸ்.பி பரமேஸ்வர ரெட்டி, காவல்துறையினர் குடும்பங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் என்றார். காவல்துறையினரின் குடும்பங்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையை இது காட்டுகிறது என்றும் ரோஜா கூறினார்.

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வருகிற 14ஆம் தேதி மாலை போகி தேர், கொலு, சாமி வீதிஉலா, 15ஆம் தேதி காலை மகர சங்கராந்தி பண்டிகை, சங்கராந்தி திருமஞ்சனம், 16ஆம் தேதி கோதாதேவி பரிணய உற்சவம், அன்று நடக்க இருந்த பர்வேடு உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. அன்று புண்டரிகவல்லி தாயார் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம், மலர் மாலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+