மா கோலம் போட்ட ரோஜா..மகரசங்கராந்தி விழாவில் சுவாரஸ்யம்..சேவல் சண்டையும் விறுவிறு
திருப்பதி: மகர சங்கராந்தி விழாவை முன்னிட்டு ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா திருப்பதியில் நடைபெற்ற விழாவில் மா கோலம் போட்டு அசத்தினார். சேவல் சண்டையை உற்சாகமாக தொடங்கி வைத்தார். சூரியனின் மகர ராசி பிரவேசத்தை தான் மகர சங்கராந்தியாக நாம் கொண்டாடுகிறோம். தமிழ்நாட்டில் தை பொங்கல் போல ஆந்திராவில் மகர சங்கராந்தி விழா கொண்டாடப்படுகிறது.
மகர சங்கராந்தி விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஆந்திராவில் ஆங்காங்கே கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. திருப்பதியில் உள்ள காவல்துறை மைதானத்தில் இன்றைய தினம் ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா தலைமையில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்டது.

சங்கராந்தி நிகழ்ச்சியில் திருப்பதி ஆட்சியர் வெங்கட்ரமணா, எஸ் பி பரமேஸ்வர ரெட்டி, மற்றும் காவல்துறையினர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அமைச்சர் ரோஜா மாக்கோலம் போட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து விதவிதமாக போடப்பட்ட கோலங்களைப் பார்வையிட்ட அவர், சேவல் பந்தயம், கபடி போட்டி உள்ளிட்ட சங்கராந்தி சம்பிரதாய நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தார். சேவல்கள் சண்டை போட்டதைப் பார்த்து உற்சாக குரல் எழுப்பினார் ரோஜா.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரோஜா, சங்கராந்தி பண்டிகை நமது வாழ்க்கை, கலாச்சாரம் ஆகியவற்றுடன் தொடர்பு உடையது. இந்த நேரத்தில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திருவிழா நாட்களில் கூட காவல்துறையினர் தங்களின் குடும்பத்தினருடன் பங்கேற்க முடியாமல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருப்பதி எஸ்.பி பரமேஸ்வர ரெட்டி, காவல்துறையினர் குடும்பங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் என்றார். காவல்துறையினரின் குடும்பங்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையை இது காட்டுகிறது என்றும் ரோஜா கூறினார்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வருகிற 14ஆம் தேதி மாலை போகி தேர், கொலு, சாமி வீதிஉலா, 15ஆம் தேதி காலை மகர சங்கராந்தி பண்டிகை, சங்கராந்தி திருமஞ்சனம், 16ஆம் தேதி கோதாதேவி பரிணய உற்சவம், அன்று நடக்க இருந்த பர்வேடு உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. அன்று புண்டரிகவல்லி தாயார் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம், மலர் மாலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications