ஏய்.. பீடி கொடு.. முடியாது.. கொடு.. முடியாது.. சண்டை.. கடைசியில் கொலை!
பீடி கேட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர்: மது போதை தலைக்கேறி விட்டால் கொள்ளையாவது, கொலையாவது.. எல்லாமே தறிகெட்டுதான் நடக்கும். அப்படிதான் தர்மபுரியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ராமியாம்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர் முருகன். இவர் ஒரு கூலித்தொழிலாளி. 47 வயதாகிறது. இவர் நேற்றிரவு மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கேபிள் பதிக்க குழிதோண்டும் வேலையை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் லட்சுமணன் என்பவரும் இந்த பணியை செய்து கொண்டிருந்தார். இரண்டு பேரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.

கல்லை போட்டார்
இந்நிலையில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு, அது பின்னர் தாக்குதலாக மாறி பிறகு ரணகளமாகிவிட்டது. ஆத்திரம் அடைந்த லட்சுமணன் பக்கத்தில் கிடந்த கல்லை தூக்கி முருகன் தலையில் போட்டுவிட்டு எஸ்கேப் ஆனார். அக்கம்பக்கம் இருந்தவர்கள் இருவருக்கும் நடந்த தாக்குதல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். ஆனால் எதற்காக பிரச்சனை என்று யாருக்கும் தெரியாது.

போலீசில் தகவல்
பொதுமக்கள் ஓடி வருவதற்குள் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்து கிடந்தார் முருகன். அதனால் அவரை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். எனவே உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

லட்சுமணன் கைது
விரைந்து வந்த போலீசார் இருவருக்கும் நடந்த தகராறு குறித்து விசாரித்ததில், பொதுமக்கள் தங்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்றனர். எனவே சம்பந்தப்பட்ட லட்சுமணனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் வேலாயுதம்பாளையம் மேம்பாலம் அருகில் எதிர்பாராதவிதமாக லட்சுமணன் நின்று கொண்டிருந்தார். இதனை கண்ட போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். பின்னர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் லட்சுமணன் கூறியதாவது:

தகாத வார்த்தைகள்
"நானும் முருகனும் அன்னைக்கு வேலை முடித்துவிட்டு சரக்கு சாப்பிட்டோம். அப்போது என்னிடம் முருகன் பீடி வேண்டும் என்று கேட்டார். நான் இல்லை என்றேன். இதனால் என்னை அசிங்கமாக திட்டினார். அதனால் ஆத்திரம் அடைந்த நான் முருகன் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தேன்" என்றார். இதையடுத்து லட்சுமணனை போலீசார் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications