ஆசையை தூண்டிய ஆன்லைன் ரம்மி.. வீட்டில் இருந்த நகையையும் வைத்து ‘போச்சே’.. ரயில் முன் பாய்ந்த மாணவர்!
திருச்சி: ஆன்லைன் ரம்மி விளையாடியதன் காரணமாக பணத்தை இழந்ததையடுத்து பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே ஆன்லைன் ரம்மி தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மியால் தொடரும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் விதத்தில் ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், ஜனநாயக அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி என்பது ஒரு நியாயமான விளையாட்டு அல்ல, பணமும் பறிபோகும், மன உளைச்சலும் ஏற்படும் என காவல்துறை அவ்வப்போது எச்சரித்து வருகிறது. அதாவது "நாம் விளையாடும் இதர விளையாட்டுகளை போல இது கிடையாது. இதில் எதிர் தரப்பில் மனிதர்களுக்கு பதில் புரோகிராமிங் செய்யப்பட்ட கணினிதான் விளையாடும். எனவே எப்படி விளையாடினாலும் நீங்கள் தோற்பது நிச்சயம். முதலில் உங்களுக்கு போனஸ் பணம் கிடைக்கும். இதுதான் உங்களுக்கான தூண்டில். பின்னர் முதலிரண்டு முறை நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

தற்கொலை
ஆனால் அடுத்த நான்கு முறை உங்களது ஆட்டம் தோல்வியில் முடியும். பின்னர், மீண்டும் வெற்றி பெறுவீர்கள். இது உங்களுக்கு புதிய நம்பிக்கை கொடுக்கும். எனவே இழந்த பணத்தை மீட்டுவிடுவோம் என உறுதியாக நீங்கள் விளையாட தொடங்குவீர்கள். ஆனால் கடைசியில் உங்களுக்கு இழப்பு மட்டுமே மிஞ்சும்." என காவல்துறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்கையில் 23 வயது பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் இந்த விளையாட்டில் பணத்தை இழந்து இறுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நகை
உயிரிழந்தவர் திருச்சி மணப்பாறையின் மலையாண்டிப்பட்டியை சேர்ந்த சந்தோஷ் என்பதும் இவர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இதனால் பணத்தை இழந்ததால் வீட்டில் இருந்த நகையை எடுத்து சென்று மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். வீட்டிலிருந்து நகையை எடுத்து சென்றதால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

விசாரணை
நேற்று இரவு வரை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அவர், இரவு 9.30 மணிக்கு மேல் தனது வாட்ஸ்அப்பில் "நான் ஆன்லைன் ரம்மி விளையாடி விளையாடி அதற்கு அடிமையாகிவிட்டேன். என்னுடைய தற்கொலைக்கு ஆன்லைன் ரம்மிதான் காரணம்" என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். பின்னர் அவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications