தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. ஒருநபர் விசாரணை ஆணையத்தில் முன்னாள் கலெக்டர் வெங்கடேஷ் ஆஜர்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். பல நாட்கள் போராட்டம் அமைதியாக நடந்தது. கடந்த 2918-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றபோது திடீரென பதற்றம் உருவானது.
அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
இந்த ஆணையம் இதுவரை 33 கட்ட விசாரணையை முடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பத்திரிகையாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அரசு துறையை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது. 1031 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

34-வது கட்ட விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில கருத்துக்கள் தெரிவித்து இருந்தார். இதனால் அவரும் ஆஜராக வேண்டும் என்று ஒருநபர் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் பலகட்ட விசாரணையிலும் நடிகர் ரஜினி ஆஜராகவில்லை. ஒருநபர் ஆணையம் இந்த மாத தொடக்கத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தற்போது 34-வது கட்ட விசாரணை நடந்து வருகிறது.

காவல் அதிகாரிகளிடம் விசாரணை
கடந்த 27-ம் தேதி முதல் விசாரணை தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளரும், தற்போதைய சென்னை குடியுரிமை பிரிவு அதிகாரியுமான அருண் சக்திகுமார், கோவை போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், துணை போலீஸ் கமிஷனர் ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

முன்னாள் கலெக்டர் வெங்கடேஷ் ஆஜர்
இன்று 3-வது நாளாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது அப்போது கலெக்டராக இருந்த வெங்கடேஷ், ஒருநபர் ஆணையம் முன்பு இன்று விசாரணைக்கு ஆஜரானார். நாளை 34-வது கட்ட இறுதி விசாரணையில் தூத்துக்குடி மாவட்ட அதிகாரியாக பணியாற்றிய வீரப்பன் ஆஜராக உள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications