ஆளுநரை பொன்முடி இழிவாக பேசியிருக்கிறார்.. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.. நடிகை குஷ்பு காட்டம்!
தூத்துக்குடி: சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி இழிவாக பேசி உள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.. மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிட மாடலா? என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 9-ந் தேதி அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார்.
இதையடுத்து ஆளுநர் வாசித்த உரை அவைக்குறிப்பில் இடம் பெறாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது, கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

ஆளுநர் வெளிநடப்பு செய்தபோது
சட்டசபையில் இருந்து கவர்னர் பாதியிலேயே வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக ஆளுநர் அரசியல் சாசன மாண்புகளை மீறும் வகையில் செயல்படுவதாக தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், ஆளுநர் விதியை மீறும் வகையில் செயல்படவில்லை என தமிழக பாஜக கூறி வருகிறது. இதனிடையே ஆளுநர் வெளிநடப்பு செய்த போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரை நோக்கி ஆவேசமாக கையை அசைத்தபடி சொல்வது போன்ற வீடியோ பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

பொன்முடியின் செயல் இழிவானது
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள
தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் துத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குஷ்பு, பொன்முடியின் செயல் இழிவானது எனவும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக குஷ்பு அளித்த பேட்டி வருமாறு:-

ஈசாவுக்கு என்று ஒரு சட்டம்
தூத்துக்குடி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழக முதல்வர் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவது போல் செயல்படுகிறார். தமிழகத்தில் எதுவுமே நடக்கவில்லை என்றார். ஈஷா மையத்தில் சுபஸ்ரீ உயிரிழந்துள்ளார். முறையாக விசாரணை நடத்த வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம்.. ஈசாவுக்கு என்று ஒரு சட்டம் நமக்கு என்று ஒரு சட்டம் எதுவும் கிடையாது முறையாக விசாரணை நடைபெற வேண்டும்.

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?
சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி இழிவாக பேசி உள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.. மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பினார். நாட்டில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை ஆவது குறித்து மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசு மட்டுமல்ல அனைவரும் ஒன்றிணைந்து அது குறித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications