தூத்துக்குடி மாணவி கொலையில் திடீர் திருப்பம்! உடல் துண்டு, துண்டாக வெட்டப்படவில்லை - காவல்துறை
தூத்துக்குடி: தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இது குறித்து போலீசார் கூறுகையில், சிறுமி துண்டு துண்டாக வெட்டப்படவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.
12ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, இயற்கை உபாதைகளை கழிக்க அருகில் உள்ள காட்டு பகுதிக்குள் சென்றிருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வராததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுமியை தேடியுள்ளனர். சிறுமி உடலில் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தற்போது வரை 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது தெரிய வரும்.
பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசன், சிபிஎம் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இப்படி இருக்கையில், இந்த சம்பவத்தில் மாணவி துண்டு துண்டாக வெட்டப்படவில்லை என்று போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
உடற்கூறாய்வுக்கு பின்னரே என்ன நடந்தது என்பது குறித்து தெரிய வரும். எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களை ஷேர் செய்ய வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
மனைவி ஊருக்கு போன நேரத்தில்..வீட்டுக்கு வந்த கள்ளகாதலி! ப்ரிட்ஜில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications