வெறிநாய் போல் சுற்றி திரிந்த தர்ம முனீஸ்வரன்..விளாத்திகுளம் மாணவி கொ***து எப்படி? வெளியான ஷாக் தகவல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த தர்ம முனீஸ்வரன், திருட்டு வாகனத்தில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் பெண்கள் இயற்கை உபாதை கழிக்க வருகிறார்களா? என தேடித்தேடி அலைந்து உள்ளான். மேலும் மாணவி கொலை செய்யப்பட்ட பிறகும் அந்தப் பகுதியில் பல நாட்களாக சுற்றி வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்துகுளம் அருகே உள்ள வேடாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த மாதம் 10ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாயமானார். மாணவி வீடு திரும்பாததால், குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் பல இடங்களில் தேடி அலைந்தனர்.
அடுத்த நாள் காலை, கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மாணவி சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடல் பரிசோதனையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாணவி கொலை
இதையடுத்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. அருகிலுள்ள சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சாயல்குடி பகுதியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (39) என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
மதுரை சிறைக்கு மாற்றம்
கைது செய்யப்பட்ட அவர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையம் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பாதுகாப்பு கருதி இரவோடு இரவாக அவனை மதுரை மத்திய சிறைக்கு போலீசார் மாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குற்றவாளி தர்ம முனீஸ்வரன் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
தர்ம முனீஸ்வரன்
கடந்த 2020ஆம் ஆண்டு ஈழஏரல் பகுதியில் 60 வயதான பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றிருந்ததாக தெரியவந்துள்ளது. பின்னர், தனது தாயின் உதவியுடன் மேல் முறையீடு செய்ததன் அடிப்படையில் ஜாமீன் பெற்று வெளியில் வந்திருந்தார். ஜாமீன் நிபந்தனையாக தினமும் தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.
பெண்களை குறிவைத்து தேடுதல்
பணத் தட்டுப்பாடு காரணமாக, பார்த்திபனூர் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடி, அதைப் பயன்படுத்தி பல கிராமங்களில் சுற்றித் திரிந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, தனியாக காட்டுப்பகுதிக்கு செல்லும் பெண்கள் மற்றும் இயற்கை உபாதைக்காக வெளியே வரும் பெண்களை குறிவைத்து அவர் கண்காணித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த நாளில், குற்றவாளி தூத்துக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, குறுக்குச்சாலை - குளத்தூர் சாலையில் சுற்றித் திரிந்துள்ளார்.
கண்காணிப்பு கேமராக்கள்
அப்போது வேடநத்தம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத பகுதிகளை முன்கூட்டியே கவனித்து, தனியாக வரும் பெண்ணை எதிர்பார்த்து பதுங்கி இருந்துள்ளார். அந்த நேரத்தில் மாணவி இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அங்கு கிடந்த கம்பியை பயன்படுத்தி தலையின் பின்புறத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. மாணவி மயங்கி கீழே விழுந்ததும், அவரிடம் நகைகள் உள்ளதா என பார்த்து, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை
அதன் பிறகு, மாணவியின் உடலை அருகிலிருந்த முட்புதர் பகுதியில் இழுத்து போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகும், சில நாட்கள் அதே கிராமப்பகுதியில் சுற்றித் திரிந்து, வழக்கு தொடர்பான தகவல்களை பொதுமக்களிடமே கேட்டு அறிந்து கொண்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவல்கள் வெளிவந்ததன் மூலம், குற்றவாளி முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொடூர செயலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது என கூறுகின்றன போலீஸ் வட்டாரங்கள்.
-
காக்கிச் சட்டை டூ எம்.எல்.ஏ..! தேர்தல் ஆணையம் அதிகாரிகளை அதிரடியாக மாற்றுவது ஏன் தெரியுமா? -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications