சித்தாளுடன் கிளாஸ்ரூமில் நுழைந்த கொத்தனார்.. விடிந்தும் வெளியே வரவில்லை.. விக்கித்த விழுப்புரம்
விழுப்புரத்தில் சித்தாள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்
விழுப்புரம்: பள்ளி வகுப்பறைக்குள் சித்தாளும், கொத்தனாரும் தூங்க போனார்களாம்.. ஆனால், காலையில் 10 மணி ஆகியும் அவர்கள் வெளியே வரவில்லையாம்.. இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது மாம்பழப்பட்டு என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் மலர்.. 45 வயதாகிறது.. இவர் சித்தாள் வேலை பார்த்து வருபவர்.
செங்கல்பட்டு பழைய பஸ் ஸ்டேண்டு அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது.. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1,500 மாணவிகள் படித்து வருகின்றனர்.

மலர்
தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தற்சமயம் கட்டிட வேலை நடந்து வருகிறது.. பள்ளியில் கட்டிட விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதால், அங்கேயே 20க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இங்குதான் மலரும் வேலை பார்த்து வருகிறார்.. இவருடன் வேலை பார்ப்பவர் கரிகாலன்.. 46 வயதாகிறது.. இவர் கொத்தனார் வேலை பார்க்கிறார்.. கட்டிட பணிகளில் மலரும், கரிகாலனும் சேர்ந்துதான் வேலை பார்த்து வருகிறார்கள்..

தகாத உறவு
நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால், கட்டிட தொழிலாளர்கள் வேலையை தொடங்கினர்.. அன்றைய தினம் இரவு, பள்ளி வகுப்பு அறையில் மலரும் கரிகாலனும் தூங்க சென்றுள்ளனர்.. ஆனால், காலை பத்து மணி வரை ரூமை விட்டு மலர் வெளியே வரவேயில்லை.. அதனால், சந்தேகமடைந்த மற்ற பணியாற்றிவர்கள் மலர் தங்கியிருந்த கிளாஸ் ரூமுக்குள் சென்று பார்த்துள்ளனர்.. அங்கு மலர் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.. உடனடியாக போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்...

கரிகாலன்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் கட்டடத்தில் பணியாற்றியவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக் தகவல்கள் வெளியானது... மலருக்கும், மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்த கரிகாலனுக்கும் 10 வருடமாகவே தகாத உறவு இருந்துள்ளதாம்.. ஆனால், மலருக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு இருப்பதாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்சினையால் மலரை கரிகாலன் கொன்றுவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது..

தலைமறைவு
காய்கறி வெட்டும் கத்தியால், மலரின் கழுத்தை அறுத்துள்ளார்.. மற்ற பணியாளர்கள் அத்தனை பேரும் அங்குள்ள நிலையில், கரிகாலன் மட்டும் தலைமறைவு ஆனது மேலும் சந்தேகத்தை உறுதிபடுத்தி உள்ளது.. இப்போது கரிகாலனை காணோம்.. தலைமறைவாகி உள்ளதால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்... இந்த ஜோடிக்குள் கள்ளக்காதல் தகராறா? அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா என்று உறுதியாக தெரியவில்லை.. அவர் கைது செய்யபட்ட பிறகுதான் கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரிய வரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications