விருதுநகரில் பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு?.. இரு சிசுக்களும் இறந்த சோகம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடும் வயிற்றுவலி காரணமாகக் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த நிலையில், அவரது வயிற்றிலிருந்த இரட்டை சிசுக்களும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள உணவுப் பிரியர்களின் விருப்பமான உணவாக பரோட்டா உள்ளது. சாலையோர கையேந்தி பவன்களில் இருந்து ஸ்டார் ஓட்டல்கள் வரை பரோட்டா இல்லாத சைவ,அசைவ உணவகங்களை காண்பதே அரிது, பரோட்டோவிலும் சாதா பரோட்டா, முட்டை, கொத்து, வீச்சு, பன் என ஏராளமான வகை பரோட்டாக்களை கண்டுபிடித்து உண்டு வருகின்றனர் ஃபுட்டீக்கள்.
அதே நேரத்தில் கலோரிகள் அதிகம் உள்ள பரோட்டாவை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். சில நேரங்களில் பரோட்டா சாப்பிட்டவர் மரணம் என்ற செய்திகள் அடிக்கடி வந்தாலும் பரோட்டா பிரியர்கள் விடுவதாக இல்லை. பரோட்டா சாப்பிட்டவர்கள் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் , திடீரென இந்த வகையான நிகழ்வுகள் அதிக முக்கியத்துவம் பெற்று விடுகின்றன.

பரோட்டா மரணங்கள்
ஏற்கனவே கமுதி அச்சங்கோவில் பாண்டி, கடலூரில் வடமாநில தொழிலாளி, கொரட்டூரில் கல்லூரி மாணவர், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மில் பெண் தொழிலாளி, திருவண்ணாமலையைச் சேர்ந்த தமோதரன் ஆகியோர் பரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இதேபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் பரோட்டாவுக்கு பெயர் பெற்ற விருதுநகரிலேயே நடைபெற்றுள்ளது. அதிலும் உயிரிழந்தவர் ஒரு கர்ப்பிணிப் பெண் என்பது கூடுதல் அதிர்ச்சி.

கர்ப்பிணிப்பெண்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அருகே அமைந்துள்ளது வதுவார்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் அனந்தாயி. இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கூடுதல் கவனம் செலுத்தி அவரது கணவர் அனந்தாயியை கவனித்து வந்துள்ளார். அனந்தாயிக்கு அடிக்கடி பரோட்டா சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. அங்குள்ள சாலையோர கடை ஒன்றிலிருந்து அடிக்கடி அவரது கணவர் பரோட்டா வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பரோட்டா சாப்பிட்ட நிலையில் மரணம்
இந்நிலையில் அனந்தாயிக்கு பரோட்டா சாப்பிட ஆசையாக இருந்ததால் சாலையோரம் உள்ள கடையில் அவரது கணவர் வாங்கிக் கொடுத்த பரோட்டாவை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அத்துடன் அவரது வயிற்றில் இருந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவர்கள் எச்சரிக்கை
இதையடுத்து அவரது உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவர்களின் முழுமையான அறிக்கைக்கு பிறகே மரணத்திற்கான காரணம் குறித்து தெரியவரும் என்றும், பரோட்டா சாப்பிட்டதால் ஃபுட்பாய்சன் ஆகி அவர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்ப்பிணி பெண் மற்றும் அவரது வயிற்றிலிருந்த இரு சிசுக்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுவாகவே பெண்கள் கருவுற்ற பின்னர், உணவுகளைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் . பழங்கள் காய்கறிகள் சத்துக்கள் நிறைந்த உணவுகளையே சாப்பிட வேண்டும் என பெரியவர்கள், மருத்துவர்கள் அறிவுறுத்துவர். கனமான உணவுகளை உண்பதால் பல்வேறு உபாதைகள் ஏற்படும்.. சில நேரங்களில் சிசுவுக்கோ அல்லது தாய்க்கோ அது ஆபத்தாகிவிடலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications