மனைவியுடன் காரில் சென்ற பாஜக நிர்வாகி.. எதிரே வந்த லாரி! ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோர விபத்தில் பலி
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் கதிரேச பாண்டியன். பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

இவர் தனது மனைவி ராமலெட்சுமியுடன் சொந்த ஊரான ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில் இவரது கார் சென்றுகொண்டிருந்தது.
அதே வழியாக தேனியில் இருந்து ராஜபாளையம் நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த லாரி இவரது காருடன் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் பாஜக நிர்வாகி கதிரேசப்பாண்டியனும் அவரது மனைவி ராமலட்சுமியும் பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்தை கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை தொடர்புகொண்டு வரவழைத்தனர். காயமடைந்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் பாஜக நிர்வாகி கதிரேசப்பாண்டியன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த அவரது மனைவி ராமலட்சுமி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் கதிரேசப்பாண்டியன் கவனக்குறைவு காரணமாக காரை ஓட்டி வந்து லாரியின் மீது மோதினார் என தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications