சாத்தூர் எஸ்.ஐ மனைவி இறப்பில் மர்மம்.. மருத்துவமனை அருகே உறவினர்கள் சாலை மறியல்! கணவர் மீது புகார்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போலீஸ் எஸ்.ஐ-யின் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உறவினர்கள், விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசியை சேர்ந்தவர் அருண்குமார் (31). இவர் சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் பணியாற்றியபோது அப்பகுதியைச் சேர்ந்த இளவரசி (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனன்யா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தற்போது சாத்தூர் என்.ஜி.ஓ காலனியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை வேலை முடித்துவிட்டு அருண்குமார் வீட்டுக்கு சென்றபோது, கதவு பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் அருண்குமார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இளவரசி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். மற்றொரு அறையில் செல்போனை கையில் வைத்து குழந்தை விளையாடிக்கொண்டு இருந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சாத்தூர் டவுன் காவல் நிலைய போலீசார், இளவரசி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்ட இளவரசி தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில், அதில் "நான் செல்கிறேன்... குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்... நன்றாக படிக்க வையுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த இளவரசியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 100-க்கும்மேற்பட்டோர் நேற்று காலை விருதுநகர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இளவரசி கொலை செய்யப்பட்டார் என்றும், அவரை அடித்து கொலை செய்த எஸ்.ஐ அருண்குமாரை கைது செய்யக் கோரியும் அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி யோகேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். மறியலை கைவிட இளவரசியின் உறவினர்கள் மறுத்ததால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். இளவரசி இறப்பு குறித்து சாத்தூர் கோட்டாட்சியர் கனகராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
மறியலில் ஈடுபட்ட இளவரசியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறுகையில், கார் வாங்க வேண்டும் என பணம் கேட்டு கொடுமைப்படுத்திய அருண் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்து நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, "இளவரசியின் தந்தை கருப்பசாமி புகார் அளித்துள்ளார். எஸ்.ஐ. அருண்குமாரிடம் தீவிர விசாரணை நடத்த இருக்கிறோம். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இளவரசியின் சாவுக்கான காரணம் பற்றி கூற முடியும்" எனத் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications