Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா வைரசை நினைவில் வைக்கும் உடல் எதிர்ப்பு சக்தி: பூஸ்டர் டோஸ் இல்லாவிட்டாலும் கவலையில்லை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் காலப்போக்கில் குறைந்து வருகின்றன, என்றபோதிலும், பூஸ்டர்கள் தேவை கிடையாதாம். ஏனென்றால் மனித உடல் பேக்-அப் பிளான் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்கிறது என்று, எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கிய பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இது கண்டிப்பாக மகிழ்ச்சிக்குரிய செய்திதான். இந்த பல்கலைக்கழகத்தின் பெரல்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் 61 பேரிடம், ஆறு மாதங்களுக்கு எம்ஆர்என்ஏ தடுப்பூசி செலுத்தி கண்காணித்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

தடுப்பூசி போட்டு சுமார் 5 மாதங்களான பிறகு, ஆன்டிபாடிகள் படிப்படியாக குறைவது வழக்கம். எனவேதான் உலக நாடுகள், பூஸ்டர் டோஸ்கள் செலுத்த திட்டமிட்டு வருகின்றன. ஆனால் பூஸ்டர்கள் செலுத்தினால் பிற நாடுகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசியே முழுமையாக சென்று சேராது என்று உலக சுகாதார அமைப்பு ஆதங்கம் தெரிவித்து வருகிறது.

நோய் எதிர்ப்பு நினைவு பெட்டகம்

நோய் எதிர்ப்பு நினைவு பெட்டகம்

இந்த நிலையில்தான், பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. அந்த ஆய்வில் கிடைத்துள்ள முக்கிய தகவல்கள் இவைதான்: கொரோனா தடுப்பூசி ஷாட்கள் SARS-CoV-2 க்கு நீடித்த நோயெதிர்ப்பு நினைவகத்தை B மற்றும் T செல்கள் வடிவில் உருவாக்குகிறது. எனவே கொரோனா தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்துவதை உடலில் பதிவாகும் இந்த செல் நினைவுகள் தடுக்கின்றன. உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி கொரோனா வைரசை நினைவில் வைத்து போரிட்டு அழிக்கிறது.

ஆச்சரியம் ஆனால் உண்மை

ஆச்சரியம் ஆனால் உண்மை

"இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கலாம்" என்கிறார், நோயெதிர்ப்பு நிறுவனத்தின் இயக்குநர் ஜான் வெர்ரி. மூன்றாம் டோஸ் அதாவது பூஸ்டர் டோஸ்கள், ஆன்டிபாடிகளை அதிகரிக்கவும், SARS-CoV-2 வைரசை தடுப்பதில் சிறந்ததுதான். இருப்பினும், உடலில் ஆன்டிபாடி அளவு குறையும் போது கூட கொரோனாவுக்கு எதிராக உடல் பாதுகாப்பு கவசமாக செயல்பட ஆரம்பிக்கிறது என்று ஜான் வெர்ரி கூறினார். ஆன்டிபாடிகள் குறைந்து, உங்களுக்கு சிறிது தொற்று ஏற்பட்டால், புதிய ஆன்டிபாடிகளை உருவாக்க, உடலில் நினைவக பி செல்கள் உள்ளன," என்றும் அவர் கூறினார்.

நோய் பரவல் தடுப்பு

நோய் பரவல் தடுப்பு

மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள சளிப் பரப்புகளில் உள்ள ஆன்டிபாடிகள், கொரோனா வைரஸை அதன் நுழைவு வாயிலில் தடுத்து, தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. ஆனால், அங்குள்ள பாதுகாப்பு ஆன்டிபாடிகள் வலு குறைந்தால் தொற்றுநோய் பரவக் கூடும். ஆனால், புதிய ஆன்டிபாடிகள் தூண்டப்படும்போது அதுவும் அழிக்கப்படும்.

Recommended Video

    Vaccine ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது | Dr. E Theranirajan explain | Oneindia Tamil
    தடுப்பூசியின் பலன்

    தடுப்பூசியின் பலன்

    மாடர்னா மற்றும் ஃபைசர் மற்றும் அதன் தொழில் கூட்டாளியான பயோஎன்டெக் எஸ்இ மூலம் தயாரிக்கப்பட்ட எம்ஆர்என்ஏ வகை தடுப்பூசிகளால் உருவாக்கப்பட்ட மெமரி பி செல்கள், கொரோனா ஆல்பா, பீட்டா மற்றும் டெல்டா உள்ளிட்ட வைரஸ் வகைகளைத் தடுப்பதில் சிறப்பாகத் செயல்பட்டதை வெர்ரியின் குழு கண்டறிந்துள்ளது. கடுமையான கொரோனா பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் இறப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதில் தடுப்பூசி ஏன் பயனுள்ளதாக இருக்கும் என்பதை விளக்க இந்த கண்டுபிடிப்புகள் உதவுகின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+