இந்தியாவிற்கு இப்போது தேவை வலுவான எதிர்க்கட்சி.. அமெரிக்காவில்.. ரவிசங்கர் குருஜி பேச்சு
வாஷிங்டன்: ‛‛இந்தியாவுக்கு வலுவான, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி தேவை. தற்போதைய எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது'' என வாழும் கலை அறக்கட்டளையின் நிறுவனர் ரவிசங்கர் குருஜி கூறியுள்ளார்.
பெங்களூரில் உள்ள வாழும் கலை அறக்கட்டளையின் நிறுவனராக இருப்பவர் ரவிசங்கர் குருஜி. இவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்காவின் மியாமியில் மனநலம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு தியானத்தின் பங்கு என்ற தலைப்பில் நடந்த மருத்துவர்களின் மாநாட்டில் பேசினார்.
அதன்பிறகு பாஸ்டனுக்குச் சென்றார், அங்கு அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மனதின் குழப்பம் தொடர்பான விஷயங்களை பேசினார்.

ரவிசங்கர் குருஜி பேட்டி
அப்போது, ‛‛கொரோனா பரவல் காலக்கட்டதால் மக்கள் மேகாம் கொள்ள துவங்கி உள்ளனர். இது உளவியல் ரீதியாக ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்து கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்'' என்றார். மேலும், தியானத்தின் பலன்கள் பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தார். இந்த வேளையில் அவர் இந்திய அரசியல் குறித்து அவர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எதிர்க்கட்சி இல்லை
தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு வலுவான, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தேவை. தற்போது உள்ள எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது. மேலும் எதிர்க்கட்சிக்கு தலைமை இல்லாதது ஜனநாயக விரோதமானது போல் தெரிகிறது. ஜனநாயக அமைப்பில் ஆளும் கட்சிக்கு எப்போதும் வலுவான எதிர்க்கட்சி தேவை. ஆனால் இந்தியாவில் தற்போது ஆளும்கட்சியை எதிர்க்கும் வகையிலான ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி இல்லை.

அமைதியான முறையில் தேர்தல்
இந்தியா ஒரு சக்திவாய்ந்த துடிப்பான ஜனநாயகம் உள்ள நாடாக உள்ளது. நாட்டில் அமைதியான முறையில் தேர்தல்கள் நடக்கின்றன. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடந்து முடிந்தது. ஏனென்றால் இந்தியாவின் எந்த கட்சியும் அரசியலமைப்பின்படி செயல்படும் நிறுவன முடிவில் தலையிட முடியாது. மேலும் நீதித்துறை வலுவாக உள்ளது.

எதேச்சதிகார நாடாக...
இருப்பின் மத்திய அரசியலில் வலிமையான எதிர்க்கட்சி இல்லாததால் எதேச்சதிகாரம் கொண்ட நாடாக வெளியுலகிற்கு இந்தியாவை காட்டும். ஆனால் நமது நாட்டில் அது நடைபெறவில்லை. ஏனென்றால் நம் நாட்டில் மக்கள் சக்தி படைத்தவர்கள்'' என கூறினார். இதன்மூலம் மத்திய பாஜக அரசை எதிர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி உள்பட எந்த கட்சியும் இல்லை என ரவிசங்கர் குருஜி தெரிவித்துள்ளார்.
-
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
Kanimozhi: சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? எந்த தொகுதியில் களமிறங்க வாய்ப்பு? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications