அமெரிக்காவை அதிர வைத்த நிலநடுக்கம்.. டெக்சாஸில் மக்கள் அலறியடித்து ஓட்டம்.. ரிக்டரில் 5.4 ஆக பதிவு..
வாஷிங்டன்: அமெரிக்காவில் மேற்கு டெக்சாஸ் பகுதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கட்டடங்கள் குலுங்கி பொருட்கள் உருண்டு விழுந்ததால் மக்கள் உயிருக்கு பயந்து அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அமெரிக்காவில் எண்ணெய் சார்ந்த தொழில் அதிகமாக டெக்சாஸில் நடக்கும் நிலையில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று டெக்சாஸ். இங்கு எண்ணெய் (சார்) உற்பத்தி தொடர்பான தொழில்கள் பிரதானமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் டெக்சாஸ் வரலாற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று திடீரென்று ஏற்பட்டுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

அதிர வைத்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் மேற்கு பகுதியான டெக்சாஸில் நேற்று மாலை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் நேரப்படி மாலை 5.35 மணிக்கு டெக்சாஸின் சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வடக்கு டெக்சாஸ் பன்ஹேண்டில் அருகே உள்ள லுபாக் வரை மிட்லாண்டிற்கு தென்மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள ஒடெசா வரையிலான பகுதியில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. மேலும் வீட்டில் இருந்து பொருட்கள் உருண்டு விழுந்தன.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இதனால் அதிர்ந்துபோன மக்கள் உயிர் பயத்தில் வீடு, கட்டடங்களை விட்டு அலறியபடி வெளியே ஓடிவந்து வெட்ட வெளியில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் சிறிது நேரம் உணரப்பட்டது. அதன்பிறகு நிலைமை சரியானது. இதையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலநடுக்கம் டெக்சாஸ் வரலாற்றில் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரிக்டரில் 5.4 என பதிவு
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இது மிட்லாண்டின் வடமேற்கு திசையில் சுமார் 22 கிலோமீட்டர் தொலைவிலும் 9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்காவின் புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தது. இதுபற்றி அந்த மையம் கூறுகையில், ‛‛தற்போதைய நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது. டெக்சாஸ் வரலாற்றில் இது 4வது வலுவான நிலநடுக்கமாக இருக்கும்'' என தெரிவித்து இருந்தது.

சேதம் தெரியவில்லை
ஆனால் கொலராடோவில் உள்ள தேசிய நிலநடுக்க தகவல் மையத்தில் செயல்பட்டு வரும் புவிசார் இயற்பியல் நிபுணர் ஜனா பர்ஸ்லி கூறுகையில், ‛‛டெக்சாஸில் உள்ள அமரில்லோ மற்றும் அபிலினில் இருந்து மேற்கு கார்ல்ஸ்பாட் வரை 1,500க்கும் அதிகமான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. தற்போதைய நிலநடுக்கத்தில் சேதம் பற்றிய விபரம் தெரியவில்லை'' என்றார்.

உயிர் பலி இல்லை என தகவல்
அதாவது சேதம், உயிர்பலி உள்ளிட்ட எந்த விபரமும் வெளியாகவில்லை. இருப்பினும் கூட பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. முன்னதாக ஒரு மாதத்துக்கு முன்பு இதேபோன்று மேற்கு டெக்சாஸில் நிலநடுக்கம் உணரப்பட்டது. தற்போது நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications