விலங்குகள் மத்தியில் தோன்றும்.. மிக மோசமான உருமாறிய கொரோனா.. பீதியை கிளப்பும் புதிய ஆய்வு
வாஷிங்டன்: விலங்குகள் மத்தியில் மீண்டும் ஒரு மோசமான உருமாறிய கொரோனா தோன்றி, அது மீண்டும் மனிதர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருதுவதால், வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு வேக்சின் போடுவது குறித்து ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மற்ற வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் புதியதொரு வைரஸ் என்பதால், அது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் புதிது புதிதாக கொரோனா உருமாறிக் கொண்டே இருக்கும் போது இந்த ஆய்வுகள் முக்கியமானதாக மாறியுள்ளது.
குறிப்பாக மனிதர்களிடம் இருந்து விலங்குகள் மத்தியில் வைரஸ் பாதிப்பு மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பூனைகளுக்கு கொரோனா
குறிப்பாக, கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் வூஹான் நகரில் பூனை ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இது மட்டுமின்றி, சில குறிப்பிட்ட நிலைகளில் கொரோனா பாதிப்பு ஒரு பூனையிலிருந்து மற்றொரு பூனைக்குப் பரவுவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதன் பிறகு இதுபோல டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் பூனைகள் மத்தியில் வைரஸ் பாதிப்பு உறுதினாது.

மிகப் பெரிய சவால்
இது மட்டுமின்றி சென்னை வண்டலூர் பூங்கா உள்ளிட்ட சில இடங்களில் புலி, சிங்கம் போன்ற விலங்கள் மத்தியிலும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால் சில இடங்களில் விலங்குகளை பராமரிக்கும் ஊழியர்களுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும் வைரஸ் பரவல் எளிதாக ஏற்படும்பட்சத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாகிவிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மனிதர்களுக்குப் பரவுமா
இப்படி நடந்தால், நாம் வீடுகளில் வசிக்கும் அனைத்து பூனைகளுக்கும் வேக்சின் போட வேண்டும், அதனைத் தனிமையும் படுத்த வேண்டும். ஆனால், நல்வாய்ப்பாக இதுவரை மனிதர்களிடம் இருந்தே பூனைகளுக்கு கொரோனா பரவியுள்ளது. பூனையிடம் இருந்து மனிதருக்கு கொரோனா பரவியதாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே இது ஒரு நல்ல விஷயம். அதாவது தற்போது வரை பூனை அல்லது நாய்கள் மூலம் நமக்கு கொரோனா பரவ வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

மிகப் பெரிய ஆபத்து
ஆனால், இது எத்தனை காலத்திற்கு நீட்டிக்கும் என உறுதியாகத் தெரியவில்லை. ஏனென்றால், ஆய்வாளர்கள் புது விதமான ஆபத்து குறித்தும் எச்சரிக்கின்றனர். அதாவது மனிதர்களிடம் இருந்து பூனை அல்லது விலங்குகளுக்குப் பரவும் வைரஸ், அதிதீவிர கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் வகையாக உருமாற வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர். இது மீண்டும் மனிதர்களுக்குப் பரவும்போது, அதனைக் கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

விலங்குகளுக்கு வேக்சின்
இது குறித்த ஆய்வுகள் தற்போது தான் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, வரும் காலத்தில் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தற்போது இருக்கும் சூழலில் விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளில் செல்லப் பிராணிகளுக்கு வேக்சின் போடும் பணி தொடங்கப்பட்டுவிட்டாலும், அது பெரியளவில் நடைபெறவில்லை.
Recommended Video

எப்போது
தற்போதைய சூழலில் விலங்குகளுக்கு அதிகளவில் வேக்சின் போடும் பணிகள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேருக்கு வேக்சின் போட்ட பின்னரே விலங்குகளுக்கு வேக்சின் போடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அது புதிய வேக்சினாக இருக்கலாம் அல்லது ஏற்கனவே தற்போது மனிதர்களுக்கு அளிக்கும் வேக்சிகளிலேயே ஒன்றாகக் கூட இருக்கலாம்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications