மதுரை சித்திரை திருவிழா 2026! அழகர் வைகை ஆற்றில் இறங்குவது எப்போது! முழு விவரம்!
மதுரை: மதுரை மாநகரின் அடையாளமாகவும், சைவ - வைணவ ஒற்றுமையின் சங்கமமாகவும் திகழும் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா 2026, வரும் ஏப்ரல் மாதம் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் எப்போது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் மதுரை மாநகரில் சித்திரை திருவிழா களைகட்டும். அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்தான் பிரதானம். இதற்காக தமிழகமெங்கும் வாழும் மக்கள் வைகை ஆற்றில் குழுமியிருப்பார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் அழகரை தரிசிப்பார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா அட்டவணையின்படி, ஏப்ரல் 19-ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. அன்றிலிருந்து மதுரையே விழாக்கோலம் பூண்டு, தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் சூடுபிடிக்கின்றன. ஏப்ரல் 26-ம் தேதி மீனாட்சி அம்மன் மதுரை நகரின் அரசியாகப் பொறுப்பேற்கும் பட்டாபிஷேக வைபவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 27-ம் தேதி திக்விஜயமும், விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ம் தேதி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அடுத்த நாள் ஏப்ரல் 29-ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும் நிலையில், அதே நாளில் அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரை நோக்கிப் புறப்படுவார்.
மதுரை மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், மே மாதம் 1-ம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 30-ம் தேதி, மதுரை எல்லையில் கள்ளழகரை வரவேற்கும் 'எதிர்சேவை' நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெறும்.
மே 1-ம் தேதி அதிகாலை 5:45 மணி முதல் 6:15 மணிக்குள், தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். இந்த ஒரு நிகழ்வைக் காண்பதற்காகவே தமிழகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றங்கரையில் திரள்வார்கள்.
ஆற்றில் இறங்கிய பிறகு, மே 2-ம் தேதி இரவு முழுவதும் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சிகள் நடைபெறும். பின்னர் கருட வாகனத்தில் பிரசன்னமாகி பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் கள்ளழகர், மே 4-ம் தேதி மீண்டும் அழகர் மலைக்குத் திரும்புவார்.
ஏப்ரல் 19-ல் தொடங்கி மே 4-ம் தேதி வரை சுமார் 15 நாட்களுக்கு மேல் மதுரையே தூங்கா நகரமாக மாறி, ஆன்மீகக் கடலில் மூழ்கியிருக்கும். லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்தத் திருவிழாவிற்காகத் தமிழக அரசு மற்றும் காவல்துறை இப்போதே சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திட்டமிட்டு வருகின்றன.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications