3 தொகுதி இடைத்தேர்தல் நடத்த ஆணையம் மறுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம்- ஸ்டாலின் வார்னிங்
சென்னை: 18 தொகுதிகளுடன் சேர்த்து 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மறுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதற்கு பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் லோக்சபா தேர்தலுக்கும் சட்டசபை இடைத்தேர்தலுக்கும் மிகப் பெரிய அளவில் பிரசாரம் நடத்தவுள்ளோம். ஊராட்சி சபை கூட்டங்கள் மூலம் ஏற்கெனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டோம்.

3 தொகுதி
40 லோக்சபா தொகுதி இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும். வழக்கை காரணம் காட்டி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன.

உள்நோக்கம்
வழக்கை காரணம் காட்டி தேர்தலை நிறுத்துவதில் உள்நோக்கம் இருக்கிறது. தேர்தல் ஆணையம் இதுபோல் உள்நோக்கத்துடன் செயல்படக் கூடாது.

நீதிமன்றத்தை நாட முடிவு
இது தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க எங்கள் எம்பிக்கள் சிவாவும், டிகேஎஸ் இளங்கோவனும் நேரம் கேட்டுள்ளனர். ஆணையரிடம் நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.

2 நாட்களில் தேர்தல் அறிக்கை
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தவிர்த்து மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. மேற்கண்ட கட்சிகளுக்கு இன்று அல்லது நாளை தொகுதிகள் இறுதி செய்யப்படும். 2 நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியாகும். அதிமுக கூட்டணி கொள்கை கூட்டணி அல்ல என்றார் ஸ்டாலின்.
-
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
தூத்துக்குடி, சேலம் ஆட்சியர்கள் மாற்றம்.. மதுரை காவல் ஆணையர் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications