இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாக போகும் ஆலியா மானசா...வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: ராஜா ராணி சீரியல் புகழ் ஆலியா மானசா, சஞ்சீவ் தம்பதி தன்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறது.
இப்படி இருக்கும் ஜோடியை விவாகரத்துச் செய்யப் போறாங்க என்று வதந்தியை கிளப்பி விட்டீர்களே என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
தங்களுடைய காதலுக்கு அடையாளமாக தற்போது இவர்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை வெளியிட்டிருக்கிறார்கள்.

ராஜா ராணி சீரியல் ஜோடி
விஜய் டிவி சீரியலில் பிசியாக இருக்கும் ஆலியா மானசா தற்போது இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவருடைய கணவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சீரியலில் காதலர்களாக நடித்து நிஜ காதலர்களாக மாறி விட்டனர்.

நிஜக் காதலர்கள்
சீரியலில் காதலிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல ஆனால் இவர்கள் திருமணம் முடிந்தாலும் என்றும் காதலர்களாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களை பற்றி அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பல வதந்திகள் கிளம்பி வரும். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலும், முன்னேற்றத்திலும் கவனமாக இருந்து வருகின்றனர். இந்த இரண்டு ஜோடிகளுக்கும் ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது.

பிஸியான வாழ்க்கை
முதல் சீரியலில் ஆல்யா மானசா இளைஞர்கள் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விட்டார். அதுமட்டுமல்லாமல் சஞ்சீவ் பெண் ரசிகர்களின் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் சீரியல்களில் நடித்து வருகின்றனர். சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகனாகவும், ஆலியா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஹேப்பி நியூஸ்
நடிகைகள் பலர் திருமணம் முடிந்திருந்தாலும் நடிப்பிற்க்காகவும், வாய்ப்புகளுக்காகவும், குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்டு வருகின்றனர். ஆனால் ஆலியா மானசா திருமணமான உடனேயே முதல் குழந்தையும் பெற்றெடுத்து விட்டர். அப்போது அவர் பாப்புலரான இடத்தில் இருந்தாலும் தனக்கு குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் .தற்போது அந்த குழந்தை இரண்டு வயதான நிலையில் இவர் மீண்டும் அம்மாவாக போகிறார் என்ற செய்தியை சஞ்சீவ் இன்ஸ்டாகிராமல் லைவ்வில், சஸ்பென்ஸாக ஹாப்பி நியூஸ் சொல்லி இருக்கிறார். இவர் இந்த நியூஸை சொன்னதும் இவருடைய ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications