வெண்பாவிற்கு திருமணம்! பாரதிக்கு குடும்பத்தினர் கொடுத்த தண்டனை..இந்த மாதிரி முடிவை எதிர்பார்க்கலையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் செயலை கண்டு ஹேமா மற்றும் லட்சுமி அவரை வெறுத்து ஒதுக்கி விட்டனர்.

பாரதியின் குடும்பத்தினர் கடைசியில் எடுத்த முடிவால் பாரதி கதி கலங்கி போயிருக்கிறார்.

இந்த பிரச்சனையிலும் வெண்பாவை, தான் திருமணம் செய்து கொள்ள தயார் என்று ரோஹித் முடிவெடுத்த நிலையில் அவருக்கே அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் வெண்பா.

நன்றி மறக்கலாமா பாரதி

நன்றி மறக்கலாமா பாரதி

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் சௌந்தர்யா பாரதியை திட்டிக் கொண்டிருக்கிறார். அன்னைக்கு ஹாஸ்பிடலில் தீவிரவாதிகளால் பாம் கட்டி தொங்கவிட்டபோது கண்ணம்மா அவளுடைய உயிரை பணையம் வைத்து உன்னை காப்பாற்றினாள். பழையதை மறந்து விட்டு அவளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என எல்லோரும் கெஞ்சியும் நீ முடியாது என்று சொல்லிட்ட ,அங்கு இருந்த காவல் துணையினர் கூட உன்னிடம் இதைத்தான் கேட்டுக் கொண்டனர். ஆனால் இப்போ வெண்பா கலுத்தில் தாலி கட்ட வந்திருக்க, இதுக்கு பேரு என்ன? என சௌந்தர்யா கேட்கிறார் அதற்கு பாரதி பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார்.

வெறுத்துப் போய் பேசிய தம்பிவெறுத்துப் போய் பேசிய தம்பி

வெறுத்துப் போய் பேசிய தம்பிவெறுத்துப் போய் பேசிய தம்பி

அப்போது அகிலன் நான் உன்னை எப்படி எல்லாம் நினைத்திருந்தேன். அண்ணிக்கும் உனக்கும் மனக்கசப்பு ஆனால் சரியாகிவிடும் என்று நினைத்திருந்தேன் ஆனால் நீ அண்ணிக்கு இப்படி ஒரு துரோகத்தை எதிர்ப்பு செய்வாய் என்று எதிர்பார்க்கவே இல்லை. உன்னை அண்ணன் என்று சொல்வதற்கே எனக்கு கேவலமாக இருக்கிறது. எனக்கு இனி நீ அண்ணனே இல்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது லட்சுமி, ஹேமா அழைத்துக் கொண்டு அஞ்சலி வருகிறார் .

குழந்தைகளின் கண்ணீர் வார்த்தை

குழந்தைகளின் கண்ணீர் வார்த்தை

ஹேமா உங்களைப் பார்த்தாலே புடிக்கல ஐ ஹேட் யூ என கூறுகிறார். நீங்க என்கிட்ட பொய் சொல்ல மாட்டேன் என்று சொன்னீங்க இல்ல டாடி ?இப்போ மறுபடியும் நீங்க என்கிட்ட பொய் சொல்லிக்கிட்டே இருக்கீங்க ? இந்த வெண்பா ஆன்ட்டி தான் நீங்க கல்யாணம் செய்ய போறீங்க என்பதை எங்க கிட்ட நீங்க மறைச்சிட்டீங்க ?உங்களை எனக்கு பிடிக்கல என்று கூறுகிறார். அடுத்ததாக லட்சுமி எனக்கு எங்க அம்மாவை அடுத்ததாக டாக்டர் அப்பாவை தான் ரொம்ப பிடிக்கும். ஆனால் இப்போ உங்களை எனக்கு பிடிக்கவே இல்லை .நீங்க எங்களை ஏமாத்திட்டீங்க என்று லட்சுமி ஹேமா இருவரும் கண்ணம்மாவின் கையைப் பிடித்து இங்க இருந்து கூட்டிவிட்டு போயிருங்க என்று அழைக்கின்றனர்.

தனி மரமான பாரதி

தனி மரமான பாரதி

பாரதியின் குடும்பத்தினர் அனைவரும் இனி எங்கள் முகத்தில் முழிக்காதே என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்கள். அவர்களை சமாதானப்படுத்த கிளம்பும் பாரதியிடம் வெண்பா வந்து பேச தொடங்குகிறார். இனி என் முகத்திலேயே முழிக்காத ,உன்னால தான் நான் நடுத்தெருவில் நிற்கிறேன் என்று கோபப்பட்டு திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி வெளியே ஓடி வருகிறார். அங்கே ஹேமா, லட்சுமி எல்லோரும் காரில் ஏறிக் கொண்டிருப்பதை பார்த்து அழுதபடி நிற்கிறார். அதே நேரத்தில் இனிமேல் உன்னை யாரு கட்டிக்கவா என்று சர்மிளா வெண்பாவிடம் அழுது கொண்டிருக்கிறார் அதற்கு நான் இருக்கிறேன் என ரோகித் சொல்கிறார்.

மீண்டும் திருமணத்தை நிறுத்திய வெண்பா

மீண்டும் திருமணத்தை நிறுத்திய வெண்பா

என்னோட குழந்தை வெண்பாவின் வயிற்றில் வளர்கிறது. அது மட்டும் இல்லாமல் நான் வெண்பா மேல உயிரையே வச்சிருக்கேன். அதனால நான் வெண்பாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஐயரிடம் தாலியை கொண்டு வரச் சொல்கிறார். ரோஹித்தின் அம்மா அவ உன்னை ஏமாத்திட்டு போனவ, அவ வேண்டாம் என்று அழுகிறார். ஒரு வழியாக ரோஹித் அவருடைய அம்மாவை சமாதானம் செய்து வைக்கிறார். கடைசியில் தாலி கட்ட போகும்போது ஸ்டாப்பிட் ரோகித் என வெண்பா நிறுத்துகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்துவிட்டது. இந்த ஒரு முடிவை ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். கடைசி நேரத்தில் வெண்பாவின் திருமணம் நடந்து விட்டால் நல்லது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+