Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படிக்கவில்லை என விட்டு சென்ற மனைவி! நான் இறந்த பிறகாவது என் குழந்தையிடம்.. கதறி அழுத ராபர்ட் மாஸ்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய மனைவி குழந்தையை நினைத்து கதறி அழுது இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் வருவதற்கான உண்மை காரணம் என்ன என்பதை கதை சொல்லும் டாஸ்க்கில் ராபர்ட் மாஸ்டர் கூறியிருக்கிறார்.

தன்னுடைய மகளுக்கு தான்தான் அப்பா என்பதே தெரியாது என்று உருக்கமாக அவர் பேசி அழுது இருக்கிறார்.

தந்தையின் விடாமுயற்சி

தந்தையின் விடாமுயற்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் தற்போது கதை சொல்லும் டாஸ்க் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தன்னுடைய கதையை கூறியிருக்கிறார் .அதில் சிறுவயதிலே ராபர்ட் மாஸ்டருக்கு போலியோ அட்டாக் ஆகிவிட்டதாம். அதனால் அவர் நடக்க முடியாமல் தான் இருந்திருக்கிறார் பிறகு அவருடைய தந்தையின் கடினமான முயற்சியால்தான் அவர் நடந்து இருக்கிறார். நடக்க தொடங்கிய பிறகு பல கஷ்டங்களை தாண்டித்தான் ஒரு டான்ஸ் மாஸ்டர் ஆகும் அளவிற்கு இவர் வளர்ச்சி அடைந்திருக்கிறாராம்.

காதலும் பிரிவும்

காதலும் பிரிவும்

டான்ஸ் மாஸ்டராக இருக்கும்போது இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்ந்ததாம். ஆனால் அந்தப் பெண்ணின் பெயரை இப்போது சொல்ல விரும்பவில்லை என்று கூறி இருக்கிறார். அந்த பெண் இவர் படிக்கவில்லை என்ற காரணத்தால் திருமணத்திற்கு பிறகு இவரை வீட்டு விலகி சென்று விட்டாராம். அப்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்ததாம். அந்த குழந்தை ராபர்ட் மாஸ்டர் இரண்டு வயது வரைக்கும் தான் பார்த்து இருந்திருக்கிறதாம்.

வலியை கொடுத்த வார்த்தை

வலியை கொடுத்த வார்த்தை

ராபர்ட் மாஸ்டரை விட்டு அவருடைய மனைவி விலகி சென்ற பிறகு அவர் இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறாராம். ராபர்ட் மாஸ்டரின் குழந்தை அவருடைய அம்மாவிடம் தான் வளர்ந்து வருகிறதாம். ராபர்ட் மாஸ்டர் தான் அவருக்கு அப்பா என்பது கூட அவருக்கு தெரியாதாம். குழந்தைக்கு ஏழு வயதாக இருக்கும் போது ஒரு முறை அவருடைய அம்மாவோடு வண்டியில் பார்த்திருக்கிறார் .அப்போது அந்த குழந்தையின் அம்மா ராபர்ட் மாஸ்டரை பார்த்து அங்கிளுக்கு ஒரு ஹாய் சொல்லு என்று சொல்லி இருக்கிறார். அவருடைய மகளும் , பாய் அங்கிள் என்று கூறி விட்டுப் போனாராம். இதெல்லாம் தனக்கு மிகப்பெரிய வலியாக இருக்கிறது என்று சொல்லி ராபர்ட் மாஸ்டர் கண்கலங்கியபடி கதறி அழுதுவிட்டார்.

பிக் பாஸ் வந்த காரணம்

பிக் பாஸ் வந்த காரணம்

நான் இறந்த பிறகாவது என்னுடைய மகளுக்கு நான் தான் அப்பா என்று சொல்லுங்கள் என்று கூறி இருக்கிறார். அதோடு நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்த காரணமே இந்த நிகழ்ச்சியை பார்த்த பின்பாவது இவர்தான் என்னுடைய அப்பா என்பதை என் மகள் தெரிந்து கொள்வார். அதற்காகத்தான் இந்த ஷோவுக்கு வந்தேன் என்று கண்ணீர் மல்க ராபர்ட் மாஸ்டர் பேசி இருக்கிறார். ராபர்ட் மாஸ்டரின் மனைவி இவரை விட்டு விலகி சென்ற பிறகுதான் இவருக்கும் வனிதாவிற்கும் சில காலமாக காதல் இருந்தது. இவர்கள் இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர் .பின்பு இருவரும் ஒரு சில காரணங்களால் பிரிந்து சென்று விட்டனர். இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய முதல் மனைவி மற்றும் குழந்தையை குறித்து கண் கலங்க பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+